பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

போட்டுக் கொண்டிருக்கிருறாம். ஜூடி, உன்னுடைய மிதியடியிலேயே, ஒட்டிக்கொண்டிருக்கும் புழுதியைப் பார்! உடம்பைத் தேய்த்து அழுக்கடைந்த தண்ணீரிலேயே படுத்துக்கொண்டு குளிக்கிறோம். நாம் இறைச்சியை உண்கிறோம். உண்மையிலே அது செத்த பிராணி” என்றிவ்வாறு விளக்கினாா் தங்தை.

எனக்கு இறைச்சி வேண்டியதே இல்லை-காய்கறி கிடைத்தால்போதும்-கத்திாிக்காய்-தக்காளி-தயிா்-நிறையக்கொட்டைப் பருப்புகள்-பப்படம்-சில வேளைக்குக் கோழிக்குஞ்சு”

“கோழிக்குஞ்சும் இறைச்சிதான்-முட்டையும் அது தான். உண்மையான பிராமணன் முட்டை சாப்பிடமாட்டான்” என்றார் தந்தை.

‘ஒருவேளை அந்த வீட்டிற்குள் என்னை விடமாட்டார்கள்’ என்று இவ்வாறு எண்ணமிட்டாள் ஜூடி. இவ்வாறு நினைக்க நினைக்க வேலிக்குப் பின்னாலிருக்கும் வீட்டிற்குள்ளே எப்படி இருக்குமோ என்று மேலும் மேலும் அவள் ஆச்சரியப்படலானாள். அவளுடைய தோழிகள் பலபேருடைய வீடுகள் உட்புறத்திலே ஆடம்பரமில்லாமல் சாதாரணமாகத்தானிருந்தன. நீல நிறத்திலோ, இளஞ்சிவப்பிலோ பூசப்பட்டிருக்கும். போட்டோப்படங்களும், காலண்டரும், அச்சிட்ட ஒன்றிரண்டு வண்ண ஓவியங்களும் காணப்படும். எல்லாவற்றையும்விட கிருஷ்ணனுடைய படங்கள்தான் வெகு அழகானவை. பாலகிருஷ்ணன் சிலவேளைகளில் தனது தாயோடும், சிலவேளைகளில் கோபிகைகளோடும் இருப்பான். நிஜமான சிறு பையனைப் போலவே வேடிக்கையும் விளையாட்டுமாக இருப்பான். மற்ற தெய்வங்கள், தேவதைகளின் படங்கள் கொஞ்சம்