பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயற்கையான அன்பு 9լ: குடு இருக்தாலும் சுர்நோயுள்ளவனுடைய உடம்பில் மிகுதியான வெப்பம் இருக்கிறது. குறைந்த சூடுள்ள நம் கை அவனுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. மிகமிகச் சூடுள்ள அக்கினி தன்னைவிடப் பெரிய அக் கினிக்கு முன் குளிர்கிறது. பெரிய அக்கினிக்கு இந்தச் சிறிய அக்கினி வெப்பமுள்ள பொருளாகாமல், தண்மை யுள்ள பொருளாகி விடுகிறது. - சுடர் உருவத்தையுடைய சிவபிரானுக்கு எரியானது: வெப்பத்தைத் தருவதில்லை. அவனுக்கு அது தண்ணிராக இருக்கிறது. அதல்ை அதில் அவன் ஆடுகிரு:ன். நெருப் பிலே குளிக்கிருன். - - அழுக்குகளையும் குப்பைகளையும் எரித்து விட்டுத் தன் தூய்மை கெடாமல் இருப்பது நெருப்பு ரோல் தூய்மை அடையாததை நெருப்பால் தூயதாக்குவார்கள். அத்த கைய நெருப்பையும் சுட்டெரிக்கும் நெருப்பாகிய இறைவ. னிடம் எந்த அழுக்கு அண்ட முடியும்? மலம் என்ருல் அழுக்கு என்று பொருள். உயிர்களுக்கு உள்ள அழுக் கையும் மலம் என்று சொல்வார்கள். அதுதான் பெரிய அழுக்கு ஆணவம் என்ற அழுக்கை உடைமையால் உயிர் கள் பிறப்பையும், இறப்பையும் அடைகின்றன. இந்த ஆணவ அழுக்குப் போல்ை இன்ப அநுபவம் உண்டாகும். ஆணவ அழுக்கடையும் ஆவியை விளக்கிஅது பூதி அடை வித்ததொரு பார்வைக்காரனும் என்பது அருணகிரி நாதர் வாக்கு. இந்த மலத்தைப் பூதங்களில் ஒன்ருக இருக்கும் அக் கினியால் எரிக்க முடியாது. அதை அழிக்கும் பெரு கெருப்பு இறைவன் ஒருவன்தான். அந்தப் பெரு நெருப்பாகிய, . இறைவன் சுடர் உருவை உடையவன். ஆதலால்.இந்த:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/97&oldid=744466" இலிருந்து மீள்விக்கப்பட்டது