பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓝9金 இருவரும் உற்சாகமும் உள்ளத் திடமும் வாய்ந்தவர்கள். அவர்கள் அந்த மாதிடத்திலே பேசினர்கள். அதன் பிறகு அவள் வகுப்பிற்கு வரவில்லை. வகுப்பிலுள்ள மற்றவர்களெல் லோரும் பல நாட்களுக்கு மிக ஒழுங்காகவும், கவனத் தோடும் இருந்தனர். லட்சுமியின் தலையில் வைத்துக் கொள்ள மோகினி அடிக்கடி பூக்கொண்டு வருவாள்; ஒரு தடவை இனிப்புப் பட்சணங்கள் சிலவற்றையும் கொண்டு வந்தாள். பிறகு வெப்பமான ஒரு மாலை நேரத்திலே பொன் னேரிக்கு இரண்டு பேர் காரில் வந்தனர். நல்ல வெண்மை யான காலுடை அணிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். அவர்களில் ஒருவர் தோல் கைப்பை ஒன்றை வைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் கால்வாய்க்குச் சென்று, தம் கையில் அளவுகோலுடன் கிற்கும் குமாரைக் கண்டார்கள். மேற்பார்வையாளன் ஒருவனிடம் குமார் கோபத்தோடு பேசிக்கொண்டிருந்தார். அவர் கரங்களிலும் கால்களிலும் கால்வாய்ச் சேறு படிந்திருந்தது. வந்தவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு கைகுலுக்கிவிட்டு குமாரோடு அவருடைய காரியாலயத்திற்கு சென்றனர். அவர்களில் ஒருவர் தலைமை எஞ்சினியரிடம் ஏதோ சொன்னர். தலைமை எஞ்சினியர் மலைத்துப் போய்விட்டார். உடனே பிஸ்கோத் தும் தேனிரும் வாங்கி வரும்படி ஆளனுப்பியதோடு, திட்டங் களையும் பதிவுக் காகிதக் கட்டுக்களையும் எடுத்துவரச் சொன் ஞர். அவர் மிக வேகமாகப் பேசவும் தொடங்கினர். பிறகு புதிதாக வந்தவர்கள் குமாருடன் அவருடைய வீட்டிற்குச் சென்றனர். லட்சுமிக்கு அவர்கள் மரியாதை யோடு வணக்கம் செலுத்தினர். சென்னைக்கு அவர் களோடு என்னை வரும்படி சொல்லுகிருர்கள். உடனே புறப்படவேண்டுமாம். ஆணுல் நீ எங்கே போவாய்? உன்னை