பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருட்கண் 57 விட்டாலும் அவ்வொளியைக் காண அவனுல் முடியாது. சூரியன் ஒளியும் அதனேக் கொண்டு பார்ப்பதற்குரிய பொருள்களும் அவன்முன் இருந்தும் அவன் கண்ணில் ஒளி - அதனுல் ஒன்றுமே தெரிவதில்லே. சூரியன் இருந்தும் குருடனுக்கு அதற்ை பயன் இல்லை. அப்படியே கண் இருந்தும் இறைவன் அருள் தொடர்பு இல்லா விட்டால் உண்மை தோன்ருது; எங்கும் இறைவன் மய மாக இருத்தலேக் காணும் பார்வை உண்டாகாது. ஒரு கி.முவர். அவருக்குச் சாளேசுவரம் வந்தது. 'படிக்க முடியவில்லை" என்று சொல்லிக் கஷ்டப்பட்டார். பிறகு கண்ணுடி போட்டுக்கொண்டார். அதன் பிறகு அவரால் நன்முகப் படிக்க முடிந்தது. இதை ஒருவன் கண்டான். கண்ணுடி போட்ட பிறகு அவர் நன்ருகப் படிப்பதைக் கண்டு வியப்படைந்தான். உடனே ஒரு கண்ணுடிக் கடைக்குப் போனன். ஒரு கண்ணுடியை எடுத்துப் போட்டுக்கொண்டான். புத்தகத்தை எடுத்துப் பார்த்தான். 'தெரியவில்லையே' என்ருன். கடைக்காரன் வேருெரு மூக்குக் கண்ணுடியைக் கொடுத்தான். அதையும் போட்டுப் பார்த்தான்; அப்போதும் தெரியவில்லை. கொட்டை எழுத்தாக உள்ள புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னன். அதையும் வாசிக்க முடியவில்லை. கடைக்காரன் காலேந்து கண்ணுடிகளே மாற்றினன். ஒன்றுகூடச் சரிப்படவில்லை. கடைக்காரன் பேச்சுவாக்கில் அந்த மனிதனே, "நீங்கள் எதுவரையில் படித்திருக்கிறிர்கள்?" என்று கேட்டான். அப்போதுதான் உண்மை புலப்பட்டது. 'எனக்குப் படிக்கத் தெரியாதே ! அதற்குத்தானே கண்ணுடி போட்டுக்கொள்ள வங்தேன்? பக்கத்து வீட்டுக் கிழவர் கண்ணுடி போட்டுக்கொண்ட பிறகு கன்ருகப் படிக்கிருர் எனக்கு மாத்திரம் படிக்க முடியவில்லையே! என்று அந்த அப்பாவி பதில் சொன்னன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/63&oldid=744429" இலிருந்து மீள்விக்கப்பட்டது