பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - அறிவியல் பயிற்றும் முறை

  • --۔-مہمہ --م۔۔--۔-۔سب یہ مس.

படுத்துதல், இயற்கைப் பொருள்களே மனித கலனுக்குப் பயன் படுத்துதல் என்ற தலைப்புகளில் அனேத்தையும் அடக்கியிருப்பதைக் காண்க. ஒவ்வொரு தலைப்பின் கீழுள்ள பொருள்கள் எவ்வாறு தொடர்புடன் அமைக்கப்பெற்றுள்ளன என்பதையும் எண்ணி உணர்க. எடுத்துக்காட்டாக கான்காம் படிவத்திற்குரிய பாடத்திட்டத்தில் நீர்' என்ற தலப்பின்கீழ் (1) நீரின் மூலங்கள்-நீரிலுள்ள குறைகள் : (2) நீரின் வகைகள் - வன்னிச் மென்னிச் ; (3) நீரைத் தூய்மை யாக்குதல் - பருகுவதற்கு, பிறவற்றிற்கு , (4) துய்மையாக்கும் முறைகள் : (5) நீரின் இயைபு : (6) ஆவியாதலும் உறைதலும் : (?) தாவரங்களுக்கும் பிராணிகளுக்கும் நீரின் இன்றியமையாமை : (8) நகரத்தில் குடிநீர் வசதி என்ற பகுதிகள் அமைக்கப்பெற்றிருப் பதைக் காண்க. அது போலவே, காற்று” என்ற தலைப்பின்கீழ் (1) காற்று பல வாயுக்களின் கலவை ; (2) காற்றின் இயைபு : (3) காற்றின் அறிமுகம் , (4) ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் - டைஆக்ஸைடு இவற்றின் பயன்கள் : (5) தாவர, பிராணி வாழ்வுக்குப் பல்வேறு வாயுக்களின் பயன்கள்: (6) மூச்சு விடுதல்; (7) காற்றிலுள்ள அசுத்தங்கள் ; (3) காற்றைத் தூய்மையாக்கும் முறை : (9) நீரில் மூழ்குவோர், குடைவழி, சுரங்கம், நீர்மூழ்கிக்கப்பல் ஆகியவற்றிலிருப் போர் காற்றைப் பெறும் முறை முதலிய பாடங்களைக் கவர்ச்சி தரும் முறையில் அமைத்துக் கற்பிக்கலாம். இவ்வொழுங்கில் பாடங்களே அமைத்துக் கற்பிக்க வேண்டுமானுல் ஆசிரியர் கலேபயில் தெளிவு”டையவராக இருத்தல் வேண்டும். ஆசிரியர் ஆய்ந்து அகன்று கற்றவராக இருந்தால்தான் பொருள்களே எல்லாத் துறைகளிலிருந்து தேர்ந்தெடுத்து எடுத்துக்காட்டுகளுடன் சிறந்ததொரு பாடத் திட்டத்தை உருவாக்குதல் முடியும் அவற்றை நல்ல முறையில் கற்பிக்கவும் இயலும். புறநிலைத் தேர்வுகள் இல்லாத வகுப்பு களுக்கும் பள்ளிகட்கும் மட்டிலுந்தான் இம்முறையிலமைந்த பாடத் திட்டத்தை மேற்கொள்ளலாம். அப்பொழுதுதான் ஆசிரியர் மாளுக்கர் வாழும் சூழ்கிலேக்கேற்றனவும் அறிவுநிலைக்கேற்றனவுமான பொருள் களேத் தேர்ந்தெடுத்துக்கொண்டு கற்பித்தல் முடியும். அமெரிக்காவில் இம்முறை சற்று மாறி வழங்குகின்றது. ஆசிரியர் ஒரு தலைப்பைக் கூறுவார் ; அதைப்பற்றி மாளுக்கர்கள் தாம் அறிந்துள்ளனவற்றையெல்லாம் ஆசிரியரிடம் உரைப்பர். பிறகு, அவற்றைப்பற்றிக் கலந்தாய்தல் நடைபெறும். ஒருவராலும் முடி:ெ காணமுடியாத பகுதிகள் மட்டிலும் நுட்ப ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பெறும். அந்த கிலேயிலுள்ள மாளுக்கர்களின் அறிவுக்கு. அப்பாற்பட்டதாகக் கருதப்பெறும் பகுதிகளே மட்டிலும் நீக்கிவிட்டு: மிதியுள்ளவற்ை றக்கொண்டு ஆசிரியரால் ஆண்டின் ஒரு பருவத்திற். 1. தன்னுால் - நூற்பா. 28.