பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டம் பொருள் அமைப்பு 29 ۳ سال ۰٫۰۷ می رسمی ۰۸) ۔یہ معمہ*مہم بسم، ۳۰۰ متر வேதியியல் வல்லுகர் உலகிலுள்ள பொருள்களேத் தனிமங்கள் என்றும், கூட்டுப் பொருள்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர். அவை இரண்டும் கலந்தவற்றைக் கலவைகள் என்று மூன்ருவது வகையில் அடக்குவர். முதலில் எல்லாத் தனிமங்களேயும் தெரிந்து கொண்டு பிறகு இரு தனிமக் கூட்டுப் பொருள்கள், பல பொருட் கூட்டுப் பொருள்கள் என்று முறைப்படி அறிதலேயும் காரண காரிய ஒழுங்கில் அறிதல் என்று கூறலாம். அன்றி, மாண்டலீஃப் வரையறைப் Lutliy tu®gy/6irarLJig. (Mandaieei*s Periodical Table) 4,gy6r&yu i 6T£r வரிசைப்படி தனிமங்களையும், தனிமங்களைப் பயிலும்பொழுதே கூட்டுப் பொருள்களேயும் படித்து இடையில் கரியையும் கரிவழிப் பிறந்த அங்ககக் கூட்டுப் பொருள்களேப்பற்றியும் அறிந்துகொள்வதையும் காரண காரிய ஒழுங்கு என்று குறிப்பிடலாம். இன்னும், தனிமங்களே உலோகங்கள் என்றும் அலோகங்கள் என்றும் பாகுடிாடு செய்து ஒவ்வொன்றையும் பயிலும்பொழுதே அதன் வழிப் பிறக்கும் கூட்டுப் பொருள்களைப்பற்றித் தெரிந்துகொண்டு போதலேயும் காரணகாரிய ஒழுங்கு என்று குறிப்பிடுவர். உயிரியல் பகுதிகளையும் இவ் வொழுங்கில் அமைக்கலாம். - ஏதாவது அறிவியல் விதி ஒன்றினே எடுத்துக்கொண்டு அதை யொட்டிப் பல எடுத்துக்காட்டுகளே விளக்கிச் செல்லலாம். எடுத்துக் காட்டாகப் புவி ஈர்ப்பு விசையை எடுத்துக்கொள்வோம். கடிகாரத்தின் ஊசலி புவி ஈர்ப்பால் பாதிக்கப்படுகின்றது ; மேலிருந்து விழும் பொருள்களின் வேக வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது. இன்னும் தாவர வளர்ச்சியின் திசையையும் பாதிக்கின்றது ; அன்றியும், பிராணிகளின் எலும்புக் கூட்டமைப்பிற்கும் அதற்கும் தொடர்பு உண்டு. தலைகீழ்ச் சதுர விதியை இன்னெ ரு எடுத்துக் காட்டாகக் கொள்வோம். ஒர் ஒளி மூலத்திற்கும் அ.து. ஒளி தரும் இடப் பரப்பிற்கும் தகுந்தாற்போல் ஒளியின் உறைப்பு மாறும் என்ற மெய்ம்மையை விளக்கலாம். அவ்விதியை பொட்டியே ஒரு காமிராவின் வில்லையின் அளவை யொட்டி ஃபிலிமைத் திறந்து வைக்கும் நேரம் கணக்கிடப்படுகின்றது என்பதைக் காட்டலாம். அவ்விதி காந்த மண்டலங்களுக்கும் பொருங்தும் என்றும், அதைக்கொண்டு ஒரு காந்தத்தின் வலிவைக் கணக்கிடலாம் என்றும் விளக்கலாம். காரண காரிய ஒழுங்குப்படி போகலாம் என்று என்னதான் தீர்மானித்தாலும், தொடர்பற்ற வளேந்த வழியில் செல்லுவதைத் தவிர்த்தல் முடியாது. காரண காரிய ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும் என்ற எண்ண மிருந்தாலும், பாடங்களே அமைப்பதில் சிரமம் இல்லாமல் இல்லை. இந்த அமைப்பு கற்பித்தலுக்காக ஆயத்தம் செய்யப்பெறுகின்றது : அதுவும் வளர்ச்சி பெறும் குழந்தையின் மனத்திற்காகச் செய்யப் பெறுகின்றது. பாடத்திட்டம் அமைப்போர் இந்த கோக்கத்தை மந்து