பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடத்திட்டம் பொருள் அறுதியீடு 25 AMAMSMMMMAMASMMAAASAASAASAASAASAAAS போதுமானது. இளம் மரணுக்கர்கள் செய்தித்தாள்களில் வெளி வருவனவற்றில் பெரிதும் நாட்டம் செலுத்துவர். எனவே, செய்தித் தாள்களில் வெளிவரும் ஒரு சில செய்திகளை வெட்டியெடுத்து அவை மையமாய் அமைந்த ஒரு சில பாடப் பகுதிகளை விளக்கலாம். மாளுக்கர் வாழும் சூழ்நிலையில் காணப்பெறும் ஒரு சில பண்டைய . பொறியியல் சாதனங்களேயும் பிறவற்றையும் தேர்ந்தெடுத்து அவற்றில் அடங்கியுள்ள அறிவியல் மெய்ம்மைகளே விளக்கினுல் மாளுக்கர்கள் அவற்றை விருப்பத்துடன் கவனிப்பர். எடுத்துக் காட்டாக ஆளேற்றம்மூலம் நீர் இறைப்பதைப் படத்தால் விளக்கி அதிலுள்ள திருப்புதிறன், வேலை ஆகிய விதிகளையும் தத்துவங் களேயும் எடுத்துக்காட்டலாம். மாடுகளைப் பூட்டி, நீர் இறைக்கும் கவலே ஏற்றம் என்னும் சாதனத்திலுள்ள சாய்தள விதிகளே விளக்க லாம். பட்டுப்புழுக் கூட்டிலிருந்து பட்டை எடுத்துச் சுற்றும் பல்வேறு முறைகள், கயிறு திரிக்கும் முறைகள், வலே பின்னுதல் ஆகியவற்றிலுள்ள பொறியின் விதிகளே விளக்கலாம். எங்கும் காணப் பெறும் மிதிவண்டியிலுள்ள பல்வேறு பாகங்களில் அடங்கியுள்ள விதிகளையும் எடுத்துக்காட்டலாம். உயிரியல் பகுதிகளில் சூழ்நிலையில் காணும் எடுத்துக்காட்டு களைக் கொண்டே மெய்ம்மைகளே விளக்குதல் வேண்டும், சூழ்நிலையில் காணும் பறவைகள், விலங்குகள், பூச்சிகள், தாவரவகைகள் முதலிய வற்றைப் பயில்வதில் மானக்கர்கள் ஆர்வம் காட்டுவர். இவ்வாறு நிலவியல், நிலஉட்கூற்றியல் முதலியவைபற்றிய செய்திகளேயும் திரட்டி வைத்துக்கொண்டு அவற்றை விளக்குதல் வேண்டும். திரட்டியவற்றைத் திட்டத்தில் அமைத்தல் : மேற்கூறியவாறு பல்வேறு துறைகளிலிருந்து தேர்ந்தெடுத்த பகுதிகளைச் சிறந்த முறையில் முழுத்தன்மை பொதுளும்படி அவற்றை ஒரு திட்டத்தில் அமைத்தல் வேண்டும். இன்று பொது அறிவியல் பாடத்திட்டத்தை திறனய்வோர் அது ஒரு கலவை' என்றும், அவியல் என்றும் கூறுகின்றனர் : கலவையில் சேர்க்கப்பெற்ற பொருள்களும் அவியலில் அடங்கியுள்ள பொருள்களும் இன்னவை என்று தெரிந்தாலும், அவை தம்முடைய தனிச் சுவையால் பலவற்ருேடு சேர்வதால் ஏற்படும் புதியதொரு சுவையைத் தருமேயானல், அப்பாடத்திட்டம் சிறந்த தொரு பாடத்திட்டம் என்றே சொல்ல வேண்டும். திட்டம் செயற்படுங்கால் பயிற்றும் ஆசிரியரால்தான் அப்புதிய சுவை வெளிப்படல் வேண்டும். மற்ருென்று, இத்திட்டத்தை அமைக்கும்பொழுது பலர் சேர்ந்து பணியாற்றுதல் வேண்டும். ஒரு குழு ஒவ்வொரு துறையிலுமுள்ள அடிப்படை மெய்ம்மைகளேயும் விதிகளையும் திரட்டுதல் வேண்டும் ; பிறிதொரு குழு மாளுக்கர்களுக்குக் கவர்ச்சி தரும் அவர்களறிந்த