பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. - அறிவியல் பயிற்றும் முறை AMAAAS بر اساس சில பள்ளிகளில் இம் முறை செயற்பட்டு ஆண்டின் இறுதியில் பள்ளிப் பொருட்காட்சியாக மலர்கின்றது. இதில் தன்னுேக்க முறைத் திட்டத்தில் கையாண்ட பொருள்கள் யாவற்றையும் வைக்கலாம். அந்த முறையின் பல்வேறு நிலைகளையும் மாணக்கர்கள் பார்வை யாளர்கட்கு விளக்கலாம். பெற்ருேர் தம் குழந்தைகளின் வேலையைக் கண்டு மகிழவும், இதல்ை ஏற்படக்கூடிய அதிகச் செலவை அவர்கள் மகிழ்வுடன் ஏற்கவும் இங்கு வாய்ப்பு ஏற்படுகின்றது. 5. விளையாட்டு முறை - ஒரு செயலே வேலை போல் மேற்கொள்வதைவிட விளையாட்டாக மேற்கொள்வது நன்று என்பதை அதுபவத்தில் அறியலாம். வேலே சுமையாகத் தோன்றும் : விளேயாட்டு மகிழ்ச்சியாக இருக்கும். இதல்ைதான் ஆண்டவன் அண்டங்களே யெல்லாம் விளையாட்டாகப் படைத்தான் என்பதை அலகிலா விளையாட்டுடையார்” என்று குறித்துப் போங்தனர். உளவியல் வல்லாரும் கல்வி அறிஞர்களும் கல்வியை விளையாட்டு முறையில் பயிற்றவேண்டும் என்று உணர்த்தி வருகின்றனர். அறிவியல் பயிற்றுதலில் விளையாட்டு முறைகளே எங்ங்ணம் மேற்கொள்ளலாம் என்பதுபற்றி ஈண்டுக் காண்போம். அறிவியல், அறிவுகிலேயில் செய்திகளே அறியும் துறையாகும் : உணர்வு நிலைக்கு அங்கு அதிக இடம் இராது. என்ருலும், சிலவற்றை உணர்வு நிலைக்குக் கொண்டு வந்து கற்பிக்கவும் செய்யலாம். உணர்வு கிலேக்குப் பாடங்கள் வரும்பொழுதுதான் விளேயாட்டு முறைகளே மேற்கொள்ள முடியும். தொடக்கநிலைப் பள்ளிகளில் பொருள்களைச் சேகரித்தல், ஒவியங்கள் வரைதல், தோட்டம் போடுதல், பூச்செடிகளே வளர்த்தல் முதலிய யாவும் விளையாட்டு முறையில் செய்திகளே அறிதலாகும். மேல் வகுப்புகளில் அறிவியற் கழகம் அமைத்தல், பொருட்காட்சி நிலையம் அமைத்தல், பொருட் காட்சி விழா கடத்துதல், கற்றுலாக்கள் செல்லுதல் முதலிய யாவும் விளேயாட்டு முறைகளின் அடிப்படையில் அமைந்தவையாகும். - நாடகத்திற்கும் அறிவியலில் இடம் உண்டு. நாடகமே உலகம், என்பது பழமொழியன்ருே ? காடகங்களே அமைத்துக் காட்டும் முறைகளை உரிய நூல்களில் கண்டு கொள்க. விறுவிறுப்பான சிறு அறிவியல் நிகழ்ச்சிகள், அறிவியல் மேதைகளின் வாழ்க்கை வரலாற்றில் கண்ட ஒரு சில அதிசய சம்பவங்கள் போன்றவற்றை நாடகப் பாணியில் அமைத்துக் கொள்ளலாம். இராஜாஜி அவர்கள் எழுதிய திண்&ண இரசாயனம் பெ. கா. அப்புசசாமி அவர்கள் *தினமணிச் சுடரில் எழுதி வந்த விஞ்ஞானப் பேரவை’ என்ற தொடரில் காணப்பெறும் கட்டுரைகள் ஆகியவை உரையாடல் 1. கம்பரா. பால.--காப்பு.