பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

இறைவனைக் குறிப்பிடச் சில அடையாளங்கள் உண்டு. அவற்றில் மாலை ஒன்று. தலைவன் என்றால் அவனுக்கும் பத்து அங்கங்கள் உண்டு; அவற்றைத் தசாங்கம் என்பர். அந்த அங்கங்களில் ஒன்று கண்ணி; அடையாள மாலை. சிவபெருமானுக்குக் கண்ணி அல்லது அடையாள மாலை கொன்றை.

"கண்ணி கார்நறுங் கொன்றை"

என்பது புறநானூறு. சிவபெருமான் திருமுடியில் அணிந்திருப்பது கொன்றை மலர். கொன்றை மலர் பொன்னிறம் பெற்றது. அதன் கேசரம் வளைந்து இருக்கும். அதனைப் பிரணவ புஷ்பம் என்று சொல்வார்கள். ஒம் என்ற எழுத்தைப் போல் அது வளைந்திருக்கிறது. பிரணவத்தை இந்திய நாட்டில் இருக்கிற எல்லாச் சமயங்களும், புத்த ஜைன சமயங்களும்கூட ஒப்புக் கொள்கின்றன. ஓங்காரத்தை விளக்கப் பல பல உருவங்களை வைத்திருக்கிறார்கள். விநாயகரே பிரணவ உருவம் உடையவர்தாம். அவரது உருவத்தைத் தலையோடும், தும்பிக்கையோடும் பார்த்தால் பிரணவ உருவத்துக்கும், அந்தக் கோலத்துக்கும் உள்ள ஒப்புமை தெரியவரும்.

கொன்றை ஓங்காரத்தை நினைப்பூட்டும் மலர். அது சிவபெருமானுக்கு மிகவும் விருப்பமானது. அதனால் அதைத் தன் ஜடாபாரத்தில் வைத்திருக்கிறான். நல்ல மணமும் நிறமும் உடையது அந்த மலர்.

பிறக்கின்றபோது சிலர் நல்லவர்களாக இருப்பார்கள். ஆனால் சேர்க்கைக் கோளாற்றினால் தலை கொஞ்சம் திரும்பும். அவர்களுடைய தாய் தந்தையர்களின் பண்பாட்டினால் மறு படியும் நல்லவர்களாகவே மாறிவிடுவதும் உண்டு. சிலர் பிறக்கும் பொழுதே தீயவர்களாகப் பிறப்பார்கள்; ஆயுள் முழுவதும் தீயவர்களாகவே இருப்பார்கள். சிலர் பிறக்கும் பொழுது இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறப்பார்கள்; ஆயுள் முழுவதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்.

இயற்கையிலேயே நல்லவர்களாகப் பிறந்து, நடுவில் தலை திரும்பிப் போய்ப் பின்பு இறைவனை அடைந்ததால் மறுபடியும் நல்லவர்களாக மாறி விடுகிறவர்களுடைய கூட்டத்திற்குப்

61

61