பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

"அமுதக் கடலுக்குள் விழுந்தவன் திக்குமுக்காடிச் செத்துப் போவான்" என்றார்கள் சிஷ்யர்கள்.

"இல்லை இல்லை; அமுதம் உண்டால் இறப்பில்லாத அமரத்துவந்தானே கிடைக்கும்? கரையில் இறக்கிறவனுக்கு அமுதத்தால் பயன் உண்டு என்றால் அதில் மூழ்கியவனுக்கு ஏது சாவு?" என்று அவர் கேட்டாராம்.

அதுபோலச் சந்திரனுக்குப் பரமேசுவரன் காலில் அகப்படும் தண்டனை கிடைத்தாலும் திருவடி சம்பந்தம் பெற்றமையால் இறைவனது தலையில் ஏறிக் கொள்ளும் பேறு அவனுக்குக் கிடைத்துவிட்டது. இறைவனுக்கு அபராதம் செய்தவனாக இருந்தாலும் அவன் திருவடியை அடைந்துவிட்டால், அவன் தன் தலையில் வைத்துக் கொள்வதற்குரிய உயர்ந்த பொருள் ஆகி விடலாம் என்பதைச் சந்திரன் காட்டுகிறான். இறைவன் அவ்வளவு கருணை உடையவன். இத்தகைய கருணைப் பெருமானுடைய பிள்ளை கருணைக் கடலாகத்தானே இருப்பான்? அதனால்தான்,
   ஆற்றைப் பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே
என்றார் அருணகிரியார்.

3

றைவன் அருளைப் பெறத் தவம் செய்ய வேண்டும் என்கிறார்கள். எனக்கு முன்னைப் பேறு இல்லை. பின்னைத் தவமும் இல்லை. கருணையே வடிவான சிவபிரான் தன்னுடைய ஜடாபாரத்திலே தன் கருணையைப் புலப்படுத்தும் அடையாளமாக ஐந்து பொருள்களை வைத்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய திருக்குமரன் இரண்டும் கெட்ட எனக்கு அற்புதமான ஆனந்தத்தைத் தந்தான். அவன் அருளிய பேற்றை என்ன என்று சொல்வேன்' என்பது இந்தப் பாட்டின் திரண்ட பொருள்.


   பேற்றைத் தவம்சற்றும் இல்லாத என்னைப் பிரபஞ்சம் என்னும்
   சேற்றைக் கழிய வழிவிட்ட வாசெஞ்ச டாடவிமேல்
   ஆற்றைப்பணியை இதழியைத் தும்பையை அம்புலியின்
   கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் கிருபாகரனே.

66