பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிருபாகரன்

மூன்று பகுதி

ந்தப் பாட்டு மூன்று பகுதிகளை உடையது. ஆன்மாவைப் பற்றிய பகுதி, பாசத்தைப் பற்றிய பகுதி. ஆண்டவனைப் பற்றிய பகுதி என்பன அவை.

"பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை" என்பது ஆன்மாவைப் பற்றிச் சொல்லியது. "பிரபஞ்சமென்னும் சேறு" என்பது மலம் அல்லது பாசத்தைப் பற்றிச் சொல்லியது. மற்றவை பதியைப் பற்றிச் சொல்லியவை. ஆன்மா மாயையாகிற சேற்றிலே இருந்தது. அங்கிருந்து அலசப் பெற்று ஆண்டவன் இருப்பிடத்தில் போய் சேர்ந்தது. இதையே உலகத்திலுள்ள எல்லாத் தத்துவ நூல்களும் வெவ்வேறு வகையில் சொல்கின்றன.

உலகம், உயிர், இறைவன் என்ற மூன்றைப் பற்றிய ஆராய்ச்சியை எல்லாச் சமயங்களும் திருப்பித் திருப்பி செய்து வருகின்றன. அந்த மூன்றுக்கும் உள்ள உறவு என்ன, இன்ப நிலை எது, அதை எப்படி அடைய வேண்டும் என்ற விவரங்களில் வேற்றுமை இருக்கலாமேயன்றி, இந்த மூன்று அடிப்படையான பொருள்கள் உண்டென்று சொல்வதில் வேறுபாடு இல்லை.

ஆன்மா ஆண்டவனை அடைவதற்குத் தடையாக இருப்பது ஒன்று. அதுதான் பிரபஞ்சச் சேறு. ஆன்மா இந்தப் பிரபஞ்சச் சேற்றிலே புதைந்து, செய்ய வேண்டிய தவங்களைச் செய்யாமல், பெறவேண்டிய பேறுகளைப் பெறாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. சேற்றைக் கழுவி இன்பம் அடைய வேண்டுமானால் புனிதமான ஆண்டவன் திருவருளைப் பெற வேண்டும்.

இந்த மூன்று பகுதியை உடைய பாடலைக் கந்தர் அலங்காரத்தின் முதற்பாட்டாக வைத்தார். மாளிகை கட்டினால் அதன் சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் வாசல் பக்கத்தை அழகாகக் காட்டுவார்களேயன்றிக் குகை மாதிரியாகவா கட்டு வார்கள்? கந்தர் அலங்கார மாளிகைக்கு இந்த முதற்பாட்டு, தக்கபடி அமைந்த வாயிலாக இருக்கிறது.

தலைவாசல்

ந்தர் அலங்காரம் என்ற நூலின் தலைவாசலை இந்தப் பாட்டிலே திறக்கிறார் அருணகிரியார். அதனால் அந்த மாளி

67