பக்கம்:ஒன்பது குட்டி நாடகங்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண் புத்தி கூர்மை 5? இரண்டு பிரிவாக பரமேஸ்வரன் சிருஷ்டித்தபடியால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் இன்னின்ன வேலையென்று பிரித்திருக்கிறது, என்பது, லோ. என் அபிப்பிராயம் என்னவென்ருல், சிருஷ்டியில் இரண்டு பிரிவாக்கப்பட்டிருந்தாலும் குளுதிசயங்களில் வித்தியாசமில்லே என்பது, பாலா. இந்த உங்கள் சண்டையை யார் தீர்ப்பது? பா. ஏன்? நீங்களும் அத்தானும்-எங்கள் வாக்குவாதத்தை யெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தீர்களே, நீங்கள்தான் தீர்மானம் சொல்லுங்கள். - பாலா. நீங்கள் இரண்டு பெயரும் கூறுவது சரியென்று தோன்றுகிறது எனக்கு, (நகைக்கிருர்கள்.) சி, எனக்கு என்ன தோன்றுகிற தென்ருல்-லோகாம்பாள் பேசும்பொழுது அது சொல்வதுதான் சரியென்று தோணுகிறது; நீ பேசும்பொழுது நீ சொல்வது சரி யென்று தோன்றுகிறது. பா. இது என்ன அத்தான் கோமுட்டி தீர்மானமாயிருக்கி மது . . . |அனைவரும் நகைக்கின்றனர்) பாலா. எங்களால் உங்கள் சண்டையைத் தீர்க்க முடியா தம்மா-காங்கள் காப்பி சாப்பிடப்போகிருேம்-நீங்கள் வருகிறீர்களா இல்லையா? சீக்கிரம் வராவிட்டால், காலே லோகாம்பாள் செய்த மைசூர்பாக்கை யெல்லாம் தீர்த்துவிடுவோம். பா. ஏ. ஏ. இ.தொ. காங்களும் வந்து விட்டோம். எங்களுக் கும் கொஞ்சம் வைத்துவையுங்கள். பாலா. ஆல்ை சிக்கிரம் உங்கள் சண்டையை முடித்துக் கொண்டு வாருங்கள். சி. இன்னும் சண்டை போட வேண்டுமென்ருல், அந்த சுவற்றை விட்டிறங்கி சண்டை போடுங்கள். இல்லா விட்டால், கிணற்றுக்குள்தான் விழுவீர்கள்: