இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1
- உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர்
- உரத்துஉதிரக்
- குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக்
- குடித்துவெற்றிக்
- களத்தில் செருக்கிக் கழுதுஆட வேல்தொட்ட
- காவலனே!
- உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர்
(வஞ்சனையில் கட்டுண்டு, உண்மையற்ற செயல்களில் அகப்பட்டுத் தவிக்கும் என்னுடைய உள்ளத்தில் உள்ள மயக்கத்தை நீக்கியருள்வாயாக; அசுரர்களின் மார்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் களிப்புற்று ரத்தத்தையே குடித்து உனக்கு வெற்றி உண்டான போர்க்களத்தில் இறுமாந்து பேய்கள் விளையாட வேலாயுதத்தை விட்ட பெருமானே!
சளம்-வஞ்சனை. பிணி-கட்டு. ப்ரமம்-மயக்கம். அவுணர்-அசுரர். உரம்-மார்பு. செருக்கி-இறுமாந்து. கழுது-பேய். தொட்ட-பிரயோகம் செய்த. காவலன்-தேவலோகத்தைப் பாதுகாக்கும் பெருமான்.)
1. பின்வரும் கம்பராமாயணப் பாடல்கள் இதனைப் புலப்படுத்தும்.
- "வென்றியால் உலகம் மூன்றும்
- மெய்ம்மையான் மேவி னாலும்
- பொன்றியார் கின்ற தோளைப்
- பொதுவற நோக்கும் பொற்பும்
- குன்றிஆ அற்ற தன்றே!
- இவன்எதிர் குறித்த போரில்
- பின்றியான் முதுகிற் பட்ட
- பிழம்புள தழும்பின் அம்மா."
- "வென்றியால் உலகம் மூன்றும்
என்பது இராமன் கூற்று.
- "நாடுள தனையும் ஓடி
- நண்ணலார் காண்கி லாமல்
- பீடுள குன்றம் போலும்
- பெருந்திசை எல்லை யானைக்
- கோடுள தனையும் புக்குக்
- கொடும்புறத் தழுந்து புண்ணின்
- பாடுள தன்றித் தெவ்வர்
- படைக்கலம் பட்டென் செய்யும்"
- "நாடுள தனையும் ஓடி
என்பது விபீஷணன் கூற்று.
234