கிங்கிணி ஓசை
நாரியைச் சொல்கிறார். இறைவனைத் தன் பாகத்திலே கொண்டவள் உமாதேவி என்று அம்பிகைக்குத் தலைமை கொடுத்துச் சொல்கிறார்.
குழந்தையாகிய முருகன் கட்சியைச் சேர்ந்தவர் அருணகிரியார். குழந்தைக்கு அம்மா, அப்பா இருவரிடமும் அன்பு உண்டு. ஆனால் அம்மாவிடம் ஒரு மாற்று அதிகமாகவே இருக்கும். குழந்தை அம்மாவை உணர்ந்து, பிறகே அப்பாவை உணர்கிறது. தாயினிடம் ஒட்டிக் கொண்டுள்ள குழந்தைக்கு அம்மா, அப்பாவின் மனைவி அல்ல; அப்பாதான் அம்மாவின் கணவர். உலகத்தாருக்கு அவருடைய மனைவி அவள். ஆனால் குழந்தைக்கு அவளுடைய கணவர் அவர். அவளுக்குத்தான் தலைமை. அவள் உடையவள்; அவன் உடைமைப் பொருள். அம்மாவுக்கு பெருமை தரும் குழந்தையின் கட்சியைச் சார்ந்த அருணகிரிநாதரும் அந்த அன்னைக்கே சிறப்புக் கூறுகிறார்.
- "த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
- பாகத்தில் வைக்கும் பரமகல் யாணி"
என்று பின்பும் சொல்வார்.
அப்பைய தீட்சிதர் என்ற பெரிய வடமொழி வித்துவான் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த சிவபக்தர். பல நூல்களின் ஆசிரியர். மன்னர்களாலும் மக்களாலும் நன்கு மதிக்கப் பெறுபவர். அவருடைய மனைவியின் பெயர் ராஜம். அந்த அம்மை பிறந்த வீட்டிலும் ஊரிலும் அவளை ஆச்சா என்றே அழைத்து வந்தார்கள்.
ஒருநாள் அப்பைய தீட்சிதர் தம் மாமனார் ஊருக்குப் போய் இருந்தார். அவரைக் கண்ட ஊர்ப் பெண்கள், “அதோ ஆச்சா புருஷர் போகிறார் பாருங்களடி" என்று பேசிக் கொண்டார்கள். அது அவர் காதில் பட்டது.
அவரை நேரே சுட்டி இன்னார் என்று அவர்கள் சொல்லவில்லை. நாட்டில் பலரும் புகழும் கவிஞராய், சாஸ்திர வல்லுநராய், நூலாசிரியராய் விளங்கிப் அவருடைய பெருமைகளில் ஒன்றைக்கூடச் சுட்டவில்லை. அவர் பெயரைக்கூடச் சொல்லவில்லை. ஆச்சாவோடு சார்த்திச் சொன்னார்கள். அவர்களுக்கு ஆச்சாவைத்தான் தெரியும்.
க.சொ.1-23
345