பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளிகோன் உபதேசம்

ஆதிப் பிரான் என்று மும்முதற் கடவுளும்
ஆடித்தொழும் பாற்றமற்க்
கூனேறு மதிநுதல் தெய்வக் குறப்பெண்
குறிப்பறிந் தருகணைந்துன்
குற்றேவல் செய்யக் கடைக்கண் பணிக்கெனக்
குறையிரந் தவள் தொண்டைவாய்த்
தேனுறு கிளவிக்கு வாயூறி நின்றவன்
செங்கீரை ஆடியருளே
செத்துப் பிறக்கின்ற தெய்வங்கள் மணவாள
செங்கீரை ஆடியருளே."

பாகு மொழி

குமரகுருபரர் இந்தப் பாட்டில் வள்ளிநாயகியின் மொழிக்குத் தேனை உவமையாக்கினார். அருணகிரிநாதர் அந்த மொழிக்குப் பாகையும் உவமை கூறினார்.

“கரங்கமல மின தரம் பவளம்வளைகளம் பகழிவிழி மொழிபாகு
கரும்பமுது முலைகுரும்பை குருகுபகரும் பிடியினிடை எயின்மாது

என்பது திருப்புகழ். வேறு ஓரிடத்தில், "பாகு கனி மொழி மாது குறமகள்" என்று பாடுகிறார். எம்பெருமானுக்குப் பாகு கொடுக்கும் போது வள்ளிநாயகி இங்கிதமொழி பேசிக் கொடுத்தால் அந்தப் பாகும் கனிந்துவிடுமாம். பாகு கனிவதற்குக் காரணமான மொழி, பாகுக்கும் சுவை மிகச் செய்யும் மொழி என்று பொருள் செய்வது சிறப்பாக இருக்கும். பாகையும் கனியையும் போன்ற மொழி என்றும் சொல்லலாம். இப்படித்தேன் என்றும், பாகு என்றும் வள்ளியின் மொழிக்கு உவமைகளைக் கூறுவது புலவர் வழக்கம். அருணகிரிநாதருக்கு அந்த உவமைகளால் திருப்தி உண்டாகவில்லை. "ஏதோ அவசரத்தில் உபமானம் சொல்லிவிட்டோம். வள்ளியெம்பெருமாட்டியின் மொழிக்கு உபமானம் சொல்வது தவறு" என்று சொல்கிறவரைப்போல இப்போதும் பாடுகிறார்.

தேன் என்று பாகு என்று உவமிக்கொணா மொழித் தெய்வ வள்ளி" என்கிறார். எம்பெருமானது பேரின்ப அநுபவத்தைப்

க.சொ.1-19

281