பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 கஞ்சியிலும் இன்பம்

ஷனேகள், காதல் நாடகம் எல்லாம் கடக்கின்றன. அத்தான் விஜயம் என்ருலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித மான குது கலம்.

அதோ அத்தான் விஜயம் செய்கிருன் ! அவன் வரும்போது புளியந்தோப்பு வழியாக வக் திருக்கவேண்டும். அவன் தலையில் இரண்டு புளியம் பூ இதழ்கள் மின்னுகின்றன. அதை இந்தச் சிறு குட்டி, அவன் மைத்துணி, பார்த்துவிட்டாள். ஆஹா உலகத் துக்கு இது புளியம் பூ அத்தான் கொண்டையில் மின் னும்போது அதற்கு ஒரு பொலிவு ஏற்பட்டுவிட்டதே ! என்ன அழகாக விளங்குகிறது . அத்தான் கொண்டைக்கு ஏற்ற தாழம்பூவாக அல்லவோ இருக்கிறது ' என்று தன் பரிகாசத்தை ஆரம்பித்துவிட்டாள்.

பூ பூ புளியம்பூ -

பொன்அத்தான் கொண்டைக்குத் தாழம்பூ அத்தைமகன் வாசலிலே -

அதோ நிற்கிருன் பாருங்கள். மீசையின் முறுக்கைப் பார்

மேலே சரிகைக் குட்டையைப் பார் சொக்காயின் சொகுசைப் பார்

தேசவத்தியின் மினுக்கைப் பார் கையில் குட்ையின் ஒழுங்கைப்பார்

கடியா ரத்தின் கொலுசைப்பார் இங்கே வந்த காரியம் - என்ன வென்று கேளுங்கள்.

! فی فه4s P / فی! یا இந்தப் பரிகாசத்தை அவன் எதிர்பார்த்தே வந்த வன்; வீட்டிற்குள்ளே நுழைகிருன் அவனுடைய ஆடை