பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. கஞ்சியிலும் இன்பம்

அத்தானுக்கு விருந்து பலமாக நடைபெறுகிறது. தன் மைத்துணியுடன் ஒய்யாரமாகப் பேசுகிருன். அவன் வந்து சென்றது ஒரு பெரிய விழாவைப்போல இருக்கி றது. அயல்வீட்டுக்காரர்களுக்கு அந்த வீட்டில் மாப் பிள்ளையை எப்படி வரவேற்ருர்கள், என்ன விருந்து செய் தார்கள், அவன் என்ன பேசினன், ஏதாவது கோபம் உண்டா என்றெல்லாம் தெரிந்துகொள்ள ஆவல் உண்டா கிறது. -

அந்தச் சிறுபெண்தான் இருக்கிருளே, அவர்களுக் குச் செய்தியைத் தெரிவிக்கும் கருவியாக. - ' உங்கள் வீட்டில் இன்று என்ன சமையல் ?” அவள் பதில் சொல்கிருள் : கத்திரிக்காய்ப் பாக்கறி

கடக்லப்பருப்புக் கூட்டுக்கறி மனமான மதராஸ்ரம்ை

மகாராஜா மயங்கும் பாயஸம். சுதேசி சாம்பார்

தஞ்சாவூர்த் துவையல் தங்கமான பொரியல் -

பொம்பாய் மாப்பிகா சாப்பிடுகிரும் அவ்வளவு தானம்மா

எங்கள் வீட்டில்! ' அத்தான் வந்தானே ? என்ன சொன்னுன் ?" என்று மற்ருெரு கிழவி கேட்கிருள் விடை வருகிறது:

அத்தான் வந்தாங்க

ஆத்தில் இருக்கிற பாகற்காயை - அறுக்கச் சொன்குங்க

பின்னே கொஞ்சம் நெய்யை ஊற்றி - வறுக்கச் சொன்குங்க