பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, என் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். என்னை வருத்துகின்ற குறையைப் போக்க வேண்டும். உன்னைத் தவிர, நான் யாரிடம் போய் முறையிடுவேன்!”

மீனாட்சியின் கண்கள் கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தன. கைகள் இரண்டும் குவிந்து தொழுது கொண்டிருந்தன. நின்ற நிலையிலே மெய்மறந்து, பிரார்த்தனை செய்த மீனாட்சி, அன்புக்கு ஏங்கிய குழந்தை ஒன்று தன் அன்னையின் முகத்தையே பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

அம்பிகை தன்னையே பார்ப்பது போலவும், தன்னைப் பார்த்தே புன்னகை செய்வது போலவும் மீனாட்சிக்குத் தோன்றியது, தான் தேவியிடம் கோரிய கோரிக்கையும் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் கோயில் மணி ஒலிக்கும் சத்தம் கேட்டது. வெளியே நின்றவர்களில் யாரோ ஒரு பக்தர், கோயில் மணியை அடித்து வேண்டிக் கொண்டதை, தனக்கு ஏற்பட்ட நல்ல சகுனமாகவே நினைத்துக் கொண்டு மீனாட்சி வீட்டுக்குப் புறப்பட்டாள்.