20
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
வேலை எனக் கென்ன இருக்கிறது?’ என்றார் நடேசன்.
வேலைக்குக் கூலியெல்லாம் பேசி முடித்துக் கொண்டார்கள். அதற்காக முன்பணமும் தந்தார் தருமலிங்கம். பெற்றுக்கொண்ட நடேசன் பெருமை பொங்கப் பேசினார். ‘அம்பிகையின் அருளால்தான் இந்த வேலை கிடைத்தது. கூலியும் கிடைத்தது. இனி வயிறார சோறும் கிடைக்கும்’ என்று வணங்கினார்.
‘தினமும் வீட்டுக்கே வந்துவிடு. வேலையை செய்து முடிக்கும்வரை உமது ‘பட்டரை’ இங்கேயே இருக்கட்டும். சாப்பாடு முதல் சகல வசதிகளையும் நானே கவனிக்கிறேன். சரிதானே! என்றார் தருமலிங்கம்.
‘இதைவிட வேறு என்னங்க எனக்கு வேணும்’ நீங்க நல்லாயிருக்கனும்!
நடேசன் நன்றிப்பெருக்குடன் சொல்லிவிட்டு வணங்கிச் சென்றார். தருமலிங்கம் தனது கடமை தொடங்கிவிட்டது. எந்தவித இடையூறின்றி நடக்கும் என்பதைத் தன் மனைவியிடம் சொல்வதற்காக, வீட்டிற்குள்ளே சென்றார், அவரது நடை பந்தயக் குதிரைபோல இருந்தது.