பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நினைத்தது நடக்கிறது என்று தருமலிங்கமும், தனக்கு நல்லது நடக்கப் போகிறது என்று நடேசனும் தனித் தனியே நினைத்தவாறு, இருவரும் நடந்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் கோயில் மணி டாண் டாண் என்று ஒலித்துக்கொண்டு இருந்தது.

தருமலிங்கம் வீட்டுக்கு முன்புறம் வெளியே முற்றத்தில் அமர்ந்திருந்த நடேசன், ‘ஏன், நம்மை தருமலிங்கம் அழைத்தார்? என்னவாக இருக்கும்?!’ என்று மண்டையைச் சொறிந்தவாறே யோசனையுடன் அமர்ந்திருந்தார். அடிக்கடி அவர் கண்கள் வீட்டின் உட்புறத்தை நோக்கியவாறு இருந்தன.

பெட்டியில் இருந்த வைரக்கற்களைப் பத்திரமாக தன் கைகளில் ஏந்தியவாறு, உள்ளிருந்து வந்தார் தருமலிங்கம். வானத்தில் உள்ள விண்மீன்கள் போல வைரக்கற்கள், அந்த நீலத் துணியில் வண்ண ஒளிகாட்டின.

பளபளப்பைப் பார்த்த நடேசன், தன்னை மறந்து, கிடந்த அக்கற்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

என்ன நடேசன்! அப்படி ஆச்சரியமா பார்க்குறே?