பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடவுள் கைவிட மாட்டார்

33


பழக்கத்தின் காரணமாக, பொட்டலத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே மீனாட்சியும் வாங்கிக் கொண்டாள்.

நடேசன் மீனாட்சியிடம் மகிவும் பணிவுடனும் அடக்கத்துடனும் வணங்கி, விடைபெற்றுக் கொண்டார். மீனாட்சியும் நடேசனின் பணிவையும் அன்பையும் கண்டு மகிழ்ந்து, ‘தோடு முடிந்ததும் நல்ல சன்மானம் தந்து கெளரவிக்க வேண்டும்’ என்று நினைத்தவாறு புன்சிரிப்புடன் விடை தந்தாள்.

வீட்டைவிட்டு வெளியே வந்த நடேசன், திரும்பி மீண்டும் ஒருமுறை, ஒரு மாதிரியாக அந்த வீட்டைப் பார்த்தார். பிறகு தன் வேட்டியில் சுருட்டி மடக்கிக் கட்டியிருந்த மடிப் பகுதியை ஒரு தரம் தடவிப் பார்த்துக் கொண்டார்.

இப்பொழுது, நடேசன் நடையில் வேகம் இருந்தது.