பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பணம் வேண்டும் என்று நடேசன் கேட்டதுதான் தாமதம். உட்கார்ந்திருந்த தருமலிங்கம் எழுந்தார்! நடேசனை நோக்கி வந்தார்.

‘உனக்கு வேறு வேலையே கிடையாதா? பணம் பணம் என்று ஏன் என் உயிரை எடுக்கிறாய்! வேலையை முடித்துவிட்டு போய் தொலைப்பதுதானே? ஏற்கனவே பேசிய சுலிக்கு மேல் ஐம்பது ரூபாய் அதிகம் வாங்கியிருக்கிறாய்? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இளிச்சவாயன் என்று என்னை நினைத்துவிட்டாயா?

நடேசனுக்கு மிகவும் அவமானமாகப் போய்விட்டது. குனிந்த தலை நிமிராமல் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்.

நடேசன் போன பிறகுதான் தருமலிங்கத்தின் கோபம் குறைந்தது. இப்படி ஏன் நடேசன் மேல் கோபப்பட்டோம் என்று தன்னைத் தானே நொந்து கொண்டார். காலையில் நடந்த வயல் வரப்புத் தகராறை நடேசன் மீதா காட்டி விட்டேன்? ஐயோபாவம் என்று வருத்தப்பட்டார்.

நடந்துபோன வழியெல்லாம், நடேசனின் மனம் தீராத சிந்தனையிலேயே லயித்துப் போயிருந்தது, அந்த நடை ஒரு விடையைத் தராமல், நடேசனைக் குழப்பியது.