பக்கம்:கடவுள் கைவிடமாட்டார்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நடேசன் தான் நாள் முழுவதும் நகை வேலையில் ஈடுபட்டிருந்துவிட்டு, வீட்டுக்குப் போய் மனைவியின் பக்கத்தில் இருந்து மருந்து தந்தவராயிற்றே!

தப்பி வந்த புலியானது, தவறுசெய்து திருடிவந்த நடேசனைத் தாக்கிவிட்டுத் தப்பிவிட்டது.

துப்பாக்கியும் கையுமாக நின்ற ‘ரிங் மாஸ்டர்’ துரைசாமி, குனிந்து நடேசன் மூக்கருகில் கை வைத்து, மூச்சு வருகிறதா என்று பார்த்தார். மூச்சு மெதுவாக வந்து கொண்டிருந்தது.

அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்று துரைசாமி நினைத்தார். என்ன செய்யலாம் என்று யோசிக்கும் பொழுது, நடேசன் மடியில் வைத்திருந்த வைரக்கற்கள் அடங்கிய பொட்டலம் வெளியில் வந்து அவிழ்ந்து கிடந்ததைப் பார்த்துவிட்டார்.

மின்னிய வைரக் கற்கள், துரைசாமியின் எண்ணத்தையே மாற்றிவிட்டன. ஒரு மனித உயிரை விட, வைரமே மேலாகத் தோன்றியது. துரைசாமிக்கு, யாரும் அங்கு இல்லையே! வைர ஆசை, அவரது மனிதப் பண்பை மடக்கிவிட்டு, கொடூரப்படுத்திவிட்டது.