56 - கஞ்சியிலும் இன்பம்
மாடுமோ செத்தன் மாடு
மணறுமோ கும்பிமணல் மாடிழுக்க மாட்டாமல்
மசய்கிருண்டி உன் புருசன் ! l 實 அந்த அந்தப் பிராந்தியங்களிலே உள்ள ஊர்களும் பேர்களும் பாட்டிலே விரவி வரும். -
ஆத்துனரு வண்டி வாங்கி
அதமன் கோட்டை மாடுகட்டிச் சேலத்துச் சாட்டை தீட்டிச்
சேர்த்து ஒட்டினன் ரங்கசாமி -போடு கிண்ணுக்கு ! மனம்போனபடி எண்ணியும், வாய்க்கு வந்தபடி பாடியும் கட்டில்லாத வாழ்க்கையை நடத்தும் வண்டிக் காரனுக்கு எத்தனேயோ செய்திகள் இருக்கின்றன, பாட் டிலே சொல்வதற்கு ஆலுைம் புலவர்கள் படைத்த இலக்கிய உலகத்திலே எப்படிச் சிருங்கார ரசம் தலைமை வகிக்கிறதோ அப்படியே அவன் பாட்டிலும் அந்தச் சரக்குக்குத்தான் அதிக இடம் உண்டு. வரம்பு கடவாமல் செல்லும் லட்சியக்காதல் அல்ல, அவன் பாடும் காதல். வழியிலே போகும். இளம்பெண்ணேக் கண்ணடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு, அவளேப் பார்த்துச் சொல்வது போன்ற பாட்டுக்கள் சுலபமாக வருவது ஆச்சரியம் அல்ல. காயும் கறியும், பூவும் பழமும் கூடைகளிலே சுமந்து கொண்டு விற்கச் செல்லும் கங்கையரிடத்திலே அவன் உள் ளம் செல்கிறது; அதன் வழியே தெம்மாங்கு பிறக்கிறது.
வெள்ளே வெள்ளைச் சிலக்காரி -
வென்ன்சிக்காய்க் கூடைக்காரி கோணல் மாணல் வெள்ளரிக்காய்.
கொண்டு வாடி நின்று பார்ப்போம்.