பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ே கத சி ம்பாவுணே 63

விளையாட்டு வினையாகி றது; கல்ல வினையாக முடிகிறது. கணவன் தன் மனேவியை மூன்ரும் பேரிடம் சொல்லாமல் மீட்டும் தன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு சென்று விடுகிருன்.

2

ஒரு கணவன் ஏதோ மனஸ்தாபத்தால் தன் மனைவி மேல் கோபித்துக் கொண்டு அடித்துத் துரத்திவிட்டான். முன் கோபத்தால் அப்படிச் செய்து விட்டாலும் பிறகு அவளைத் தேடிக் கொண்டு புறப்பட்டான்.

வழியிலே ஒருவனேக் கண்டு,

ஆற்றுக்குப் பகையாய் இருக்கும் மரத்தின் கீழே இருந்து வேலியைப் படல் கட்டுகிறவனே! மூவர் இரு காலால் தடக்கக் கண்டாயோ? > - என்று கேட்டான்.

அதற்கு அவன் விடை சொல்கிருன்,

அவள் செத்து மூன்று நாள் ஆச்சு, அவனேக் கொன்றவன் செத்து ஆறு நாள் ஆச்சு. -

அவனைச் சுட்டவன் செத்து ஆறு மாதம் ஆச்சு. என்று சொன்னன்.

இந்த இரண்டும் சங்கேத சம்பாஷணை. - நெசவுகாரன் ஒருவன் தேற்ற மரத்தின் கீழே பாவு - போட்டிருந்தான். அவனேப் பார்த்துத்தான். கணவன் கேட்டான். ஆற்றுக்குப் பகையென்றது கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் கொட்டையைத் தரும் தேற்ரு