மாமியாரும் மருமகளும் 77
இத்தனை காச்சலிலே
என்னமாய் வாழுவேன்? என்று புலம்பி நைகிருள். உண்மையை உணர்ந்த கணவன், "செல்வர் மனேயிலிருந்து வந்த இவளே இப்படிச் செய்யலாமா?” என்று மெல்லத் தன் அன்னையிடம் வினவுகிருன்: -
உழக்குப் பணம்கொண்டு
ஊரறிய வந்தவளே நாழிப் பணம்கொண்டு
நாடறிய வந்தவன் நாவற் பழத்தை
நான்தின்னும் சக்கரையைக் கோவைப் பழத்தை நீ
கொண்டனத்தால் ஆகாதோ?
"அப்படியா சமாசாரம் இந்தச் சிறுக்கியை இவன் தலையில் தூக்கி வைத்துக் கொள்ளலாச்சா?" என்று. மாமியாருக்கு ஆத்திரம் வருகிறது. . . . - மறுநாள் விடியற்காலயில் வேண்டுமென்றே மாமி யார் அதி சிக்கிரத்தில் எழுகிருள். கேரே மருமகள் படுத்திருக்கும் இட்த்திற்குச் சென்று திருப்பள்ளியெழுச்சி' பாடுகிருள். - ; , , , , ,
- கட்டில்விட் டிறங்காத
கானக் கருங்குயிலே, மெத்தைவிட் டிறங்காத
ம்ேனிக் கருங்குயிலே, பொழுதும் விடித்தது; பூவும் மலர்த்தது; முற்றம் தெணியாத
மூதேவி, எழுத்திரடி,