பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

கஞ்சியிலும் இன்பம்

போட்டபணி போதுங்காண்; புதுப்பணி வேண்டாங்காண்; இட்டபணி போதுங்காண்; இனிப்பணி வேண்டாங்காண்

என்று விடை பகர்கிறாள். அப்படியானால் இவள் எதற்காக வருந்துகிறாள்? ஒருகால் தாய் தகப்பனாருடைய ஞாபகம் வந்து விட்டதோ? சிறு பெண் தானே? என்ற யோசனையின்மேல் அவன் மறுபடியும் கேட்கிறான்:

தாயாரின் வீட்டுக்குப்
           போகப் பிரியமுண்டோ?
அண்ணன்மார் வீட்டுக்குப்

           போகப் பிரியமுண்டோ?

இதற்கும் 'இல்லை” என்று பதில் வருகிறது.


தாயாரின் வீட்டுக்குப்
           போகப் பிரியம்இல்லை;
அண்ணன்மார் வீட்டுக்குப்

           போகப் பிரியம்இல்லை.

“பின்னே, இவ்வாறு அழுவதற்குக் காரணம் என்ன?” என்று அவன் வற்புறுத்தவே, அந்த மங்கை நல்லாள் உள்ள செய்தியை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறாள்:

மாமியார் காச்சுவது
           மட்டிருக்கப் போவதில்லை;
நாத்தனார் காச்சுவது
           நடுவிருக்கப் போவதில்லை;
கொழுந்தியார் காச்சுவது
           கூடவிருக்கப் போவதில்லை:
ஓர்ப்படியாள் காச்சுவது

           ஒத்திருக்கப் போவதில்லை;