76
கஞ்சியிலும் இன்பம்
போட்டபணி போதுங்காண்; புதுப்பணி வேண்டாங்காண்; இட்டபணி போதுங்காண்; இனிப்பணி வேண்டாங்காண்
என்று விடை பகர்கிறாள். அப்படியானால் இவள் எதற்காக வருந்துகிறாள்? ஒருகால் தாய் தகப்பனாருடைய ஞாபகம் வந்து விட்டதோ? சிறு பெண் தானே? என்ற யோசனையின்மேல் அவன் மறுபடியும் கேட்கிறான்:
தாயாரின் வீட்டுக்குப்
போகப் பிரியமுண்டோ?
அண்ணன்மார் வீட்டுக்குப்
இதற்கும் 'இல்லை” என்று பதில் வருகிறது.
தாயாரின் வீட்டுக்குப்
போகப் பிரியம்இல்லை;
அண்ணன்மார் வீட்டுக்குப்
“பின்னே, இவ்வாறு அழுவதற்குக் காரணம் என்ன?” என்று அவன் வற்புறுத்தவே, அந்த மங்கை நல்லாள் உள்ள செய்தியை எடுத்துச் சொல்லத் தொடங்குகிறாள்:
மாமியார் காச்சுவது
மட்டிருக்கப் போவதில்லை;
நாத்தனார் காச்சுவது
நடுவிருக்கப் போவதில்லை;
கொழுந்தியார் காச்சுவது
கூடவிருக்கப் போவதில்லை:
ஓர்ப்படியாள் காச்சுவது