பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

எல்லோரையும் கைதிகளாகப் பிடித்துக்கொண்டு போயிருக்க வேண்டுமென்று எண்ணினேன். இது இந்தப் பிசாசின் பழய வழக்கம்! - இவனை இப்பொழுதே சுட்டுக்கொன்று விடலாமா என்று பார்க்கிறேன் !

வி. வென்ட்வொர்த் ! உன்னிடம் ஒரு வரம் கேட்கிறேன் நான்.

வெ. என்ன அது?

வி. இந்த - மனிதனை - சுடாதே - யுத்ததில் கைப்பற்றிய கைதியாகப் பாவிப்பாய்.

அ. அதுதான் எனது வேண்டுகோளும் ஐயா.

ஹெ. இந்த இந்தியர்களெல்லாம் - ஒரு மாதிரியானவர்களே!

வெ. ஹெர்மன் - அந்த அபிப்பிராயத்தில் நானும் உன்னுடன் கலந்து கொள்கிறேன். அப்பா-விஸ்வநாத ! இந்த ஜெர்மன் சைத்தானுக்கு உன் ரகசியத்தை நீ வெளியிடவில்லையே ?

வி. இல்லை! நான் வெளியிடுவேனென்று நீ நினைத்தாயா?

வெ. இல்லை! யமவேதனை செய்யும் இவனிடமிருக்கும் கருவிகளைக்கொண்டு அவன் உன்னைப் பிரான ஹிம்சை செய்து எங்கு அதை அறிந்தானே என்று பயந்தேன். அந்த குடூரமான இம்சைகளைப்பற்றி நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்வாமியின் கருணையினால் இப்பாழும் ராக்ஷஸனிடமிருந்து நீ தப்பினாய் - உன் இரகசியத்தை வெளியிடாமல்! ஆயினும், விஸ்வம் - உன் ரகசியத்தை உலகத்தவர்க்கு நாம் வெளியிடவேண்டிய நிமித்தியமே இராதென்று நினைக்கிறேன் - ரூஸ்வெல்ட், ஜெர்மனிமீது யுத்தம் தொடங்கிவிட்டார் !

(ஹெர்மன் தவிர மற்றவர்கள்) ஈசன் கருணை ! இனி இந்த யுத்தம் சீக்கிரம் முடிந்து போகும்.

வி. நமது பட்சம் சீக்கிரம்-ஜெயமுண்டாகுமாக! ஸ்வாமி கருணையினால்!

காட்சி முடிகிறது.
நாடகம் முற்றிற்று.