பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
காணிக்கை


“பாų, என்ன அதுக்குள்ளே செரும ஆரம்பிச் சிட்டே?..அப்பாதானே...அப்பா இன்னும் கொஞ்ச நாழிகையிலே வந்திடுவாங்க...கீழே கொஞ்சம் விளையாடு...அதோ ஆடும் குதிரை...ஒடிவா பிஸ்கட்தாறேன்... சமர்த்தில்லே...ராஜா! என்று மகனைச் சமாதானப் படுத்தினுள் வாசவி.

தாய் சொல் மிக்கதொரு மந்திரமில்லை.

பிறந்த மண் வாசனே காற்றாேடு மிதந்து வந்தது, வாசவிக்குக் கண்ணிர் வந்தது. “பாபு... என்று சொல்லி நடை பழகினுள். வாசலிலிருந்து வந்து எதிரொலித்த அறிவிப்பு அவளைச் சுண்டியிழுத்தது; காதைத் தீட்டிக் கொண்டு கேட்கலானாள்.

சென்னை-தேனும்பேட்டை காங்கிரஸ் பொருட்காட்சி விழாவிலே மரணக் கிணற்றிலே மோட்டார் சைகிள் பந்தயமொன்று வருகிற திங்கட்கிழமை நடக்கப் போகிறது. பம்பாய் புகழ் வீரர் ரமேஷ-ம், சென்னைப் புகழ் வீரர் சுதாகரும் போட்டிபோடப் போகின்றார்கள்.வெற்றி பெற்றவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு!...நல்ல சந்தர்ப்பம்!...கழுவ விட்டு விடாதீர்கள்