பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

சுலோவை அடுத்து அட்வகேட்டின் கவலை வாஸங் தியின் பேரில் கிலேத்தது நியாயமே ஆல்ை வரன் விஷயந்தான் அவருக்கு மட்டுப்படவில்லை. மூர்த்தி போல இன்னொரு மாப்பிள்ளையும் அமைந்துவிட வேண்டுமென் பதுதான் அனந்தராமனின் ஆசையும் ஆதங்கமும். அந்தச் சமயம்தான் அவர் மனம் இடியும் வண்ணம் சுலோவின் அகால மரணம்பற்றி தந்தி வந்தது. மணம் முடிந்து புது வாழ்வு தொடங்கி இன்னமும் ஒராண்டுகூடப் பூர்த்தி பெறவில்லை. அதற்குள் தன் ஆசை மகள் சுலோவின் பிரிவை எங்ஙனம் அவரால் சகிக்கக்கூடும்?

உயிர்த்துணை போன்ற தன் தமக்கையின் சாவினுல் புண்பட்டிருக்கும் தன் நிலையை வெளிக் காட்டிக்கொள்ள கேர்ந்தால் அப்புறம் தந்தையையும் தாயையும் எவ்விதம் தேற்ற முடியும் என்று எண்ணியே வெளியில் தன் துயரத் தைக் காட்டாமலிருந்தாள் வாஸந்தி. தன் பெற்றாேர் இஷ்டப்படி மூர்த்தியை விட்டோடு வைத்து சிசுருகை; செய்ய ஆரம்பித்தாள் வாஸந்தி. தன் மனைவியை இழந்த நஷ்டத்தையும் மாளாத துக்கத்தையும் ஓரளவு மாற்றச் சாத்தியமாயின வாஸந்தியின் அன்பு கனிந்த ஆதரவு மொழிகளும், தூய உள்ளத்துடன் செய்த பணிவிடை களும். தன் அத்தான் எப்படியும் துயரம்ங்ேகி அமைதி யுடன் இருக்க வேண்டுமென்பதே வாஸந்தியின் தனித்த கவலையாக-லட்சியமாக அமைந்தது.

ஆல்ை மூர்த்தி-வாஸந்தி இருவரிடையிலும் நிலவிய ஐக்கிய மனப்பான்மையையும் பாசத்தையும் அடிக்கடி கவனித்த அட்வகேட் எப்பாடுபட்டேனும் அவ்விருவர் களே முடிச்சுப் போட்டு கணவனும் மனைவியுமாக்கத் தீர்மானித்தார். காலமும் சமயமும் கூடின. மனம் போலல்லவா வாழ்வு? மூர்த்தி வாஸந்தியின் கைத்தலம் பற்றினன். ஒவ்வொரு அம்சத்திலும் சுலோவின் பிரதி