பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33


வி. (தன் கண்களை மூடிக்கொள்கிறான், அவள் உடல் நடுங்குகிறது) கருணைக் கடவுளே !

ஹெ. இவற்றை யெல்லாம் நீ கண்ணாரப் பார்க்கவேண்டும் ! - நீ உன் கண்களை மூடிக்கொள்ளாவண்ணம் செய்கிறேன் - அடே, வில்லியம் - இவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொள் - இதோ உன் இரப்பைகளை கத்தரித்து விடுகிறேன் !- விஸ்வம் - உன் கண்களைத் திறந்து - எனக்கு பதில் சொல்! நான் கூறிய இரண்டில் - நீ விரும்புவதென்ன ?

வி. (மெல்ல கஷ்டத்துடன் கண்களைத் திறந்து) அப்பா ! -அம்மா! - நான் எதையும் பொறுப்பேன்! உங்களிருவரையும் - துண்டமாக்குவதைக் கண்டு சகியேன் - அப்பா - எனக்கு உத்திரவு கொடுங்கள்

அ. பொறு! பையா! நீ என் மகன் என்பதை மறந்து பேசுகிறாய் போலும் ! நீ எனக்கு வாக்களித்ததை மற வாதே !

வி. (தன் துயரத்தை அடக்கிக்கொண்டு) இல்லை - மறவேன்.

ஹெ. ஆ! அதுதான் சரி! - நீ வழிக்கு வருவாயென்று எனக்கு தெரியும் !-சரி-சீக்கிரம் சொல்-காலஹரணம் செய்வதற்கில்லை-

வி. (மெல்லிய குரலுடன்) நான் மாட்டேன்.

ஹெ. என்ன சொன்னாய்?

வி. (உரக்க) நான் சொல்ல மாட்டேன் - உன்னிச்சையை நடத்து - மனித உருவம் கொண்ட பிசாசே !

ஹெ. இதற்கெல்லாம் பழிவாங்கி விடுகிறேன் ! - அடே கிழவா! பிடிவாதக்காரனை உன் பிள்ளை ஏதோ உன் வார்த்தையைக் கேட்பான் போலிருக்கிறது - நான் குறிப்பிட்ட இரண்டு மார்க்கங்களையும் நீ கேட்டாயல்லவா ? - மடையனை உன் பையனுக்கு புத்தி சொல் -நான் கொடுக்கும் இந்த கடைசி சமயத்தை கைவிட வேண்டாமென்று சொல்-

கடற்படை உத்தியோகஸ்தன் விரைந்து வருகிறான்