பக்கம்:இந்தியனும்-ஹிட்லரும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

(அகத்தீஸ்வர முதலியார்-வெளியிலிருந்து - வேண்டாம் அப்பா! விஸ்வம்! நாங்கள் வெளியில் இருக்கிறோம்)

வி. ஓ! (கைத் துப்பாக்கி கையிலிருந்து கீழே விழுகிறது) (கதவைத் திறந்து) அப்பா! அம்மா! மன்னியுங்கள் என்னை! சந்தோஷம் ! நான் உங்களைச் சுடாதது வா தீனம்!

(அவர்கள் உள்ளே வருகிறார்கள்)

அ. அதைவிட எங்களுக்கு அதிக சந்தோஷம், இப்பொழுதாவது தெய்வம் ஒன்று உண்டென்று நினைக்கிறாயே என்று.

வி. அடடா! அகஸ்மாத்தாய் அந்த வார்த்தை என் வாயிலிருந்து வந்தது. (அம்மணி அம்மாள்) இருக்கட்டும், இனி அந்த எண்ணம் உன் மனதை விட்டு என்றும் அகலாதிருக்குமாக!

வி. இதோ பாருங்கள் அம்மா

அ. சரி-இதைப்பற்றி இனி நாம் வாதாட வேண்டாம். அதிருக்கட்டும் - அப்பா, இந்த இரண்டு மூன்று நாட்களாக இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறாய்? ஊண் உறக்கமில்லாமல்?

வி. அப்பா - அது ஒரு ரகசியம் - நான் கூறுவதைத் தவறாக எண்ணாதீர்கள் - உங்களுக்கு அதைப்பற்றி அப்புறம் சொல்கிறேன்-சமயம் வந்தவுடன்.

அ. ஆயினும்-இது மற்றவர்களுக்குத் தெரியும்போலிருக்கிறதே-அந்த சாவுகார் என்னமோ உளறிக்கொண்டிருந்தானே எங்களிடம், என்ன அது ?

வி. அவன் என்ன சொன்னான் உங்களிடம்?

அ. அவன் சொன்ன வார்த்தைகளே அப்படியே சொல்கிறேன்-கோபித்துக் கொள்ளதே!-நீ ஒரு மடயன், நீ கண்டுபிடித்ததை நான்கு லட்சம் பொன் நாணயங்களுக்கு விற்கத் தெரியா மூடன், என்றான்.

வி. அப்பா, என்னை மன்னிக்கவேண்டும் நீங்கள்-எப்பொழுதாவது இதை நான் உங்களிடம் சொல்லித்தான்