பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138


மேல் துணிமணிகள் குவிந்திருக்கின்றன! சில மாதங்களுக்கு முன்னதாகத் திருச்சி இரயில் நிலையத்தில் எலும்பும் தோலுமாக வறுமைக் கோலத்தில் காட்சி தந்த ‘பழைய தெய்வத்'தின் பார்வையில் படக்கூடப் பயந்து மறைந்த சம்பவம் அவர் வரை என்றென்றும் பசுமை கொண்டதாகும். நம்பிக்கைத் துரோகம் எனும் மூலதனத்தைக் கொண்டு ஆரம்பமான தம் வியாபாரத்தைப் பற்றியோ, இரண்டாயிரம் ரூபாய்க்கு உடைமையாயிருந்தவர் குறித்தோ ராமலிங்கம் மறந்துபோனார்ர்! ஆனால் அதே மறதிதான் இன்று அவரைச் சித்திரவதை செய்து கொண்டிருக்கிறது!

வள்ளி மணவாளன ஏறிட்டுப் பார்த்தார் செட்டியார், ஓவியம் உயிர் பெற்றுப் பேசியது: ராமலிங்கம் நீ இப்போது உன்னையே எண்ணிப்பார்...!” என்ற குரல் எதிரொலித்துக் கிளம்பியது.

ராமலிங்கம் எண்ணினார். பங்களாவும், கடையும் நினைவில் ஓடின. இரும்புப் பெட்டியிலிருந்த 'நிதி' முன் வந்தது. ஆனால் அவரது மனத்தின் 'நிதி'அவரைச் சாறு பிழிந்து வதைத்தது. பங்களாவைச் சுற்றிலும் நோக்கினா. அவர் உயிர் பதைத்தது.

ராமலிங்கம் கவரில் மோதிக் கொண்டார். முருகனின் பாதங்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். உள்ளே சென்றார் செட்டியார். நூறு ரூபாய்த் தாள்கள் இருபதை எண்ணினார்; எடுத்துப் பையில் வைத்துக் கொண்டார்: ம்பினர். திருப்பதியின் படம் அவரது கைகளில் தவழ்ந்தது. வடித்த கண்ணீர் வழிந்து படத்தில்ஓடியது. " முதலாளி! என் தப்பை மன்னித்து விடுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து, உங்களுக்கு சேர வேண்டிய பணத்தை ஒப்படைத்து விடுகிறேன். அப்பொழுதுதான் என் மனசாட்சி என்னை மன்னிக்கும்.