பக்கம்:உயிரில் கலந்தது.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {

தாயத்தில் காதல் என்பதும் ஒரு பொய் விளையாட் டுத்தான்!...ஒட்டும் இரு உள்ளங்களை ஒரு தட்டில் அறிய உதவும் காதல் என்பதெல்லாம் சுத்தப் புரட்டு: புரட்டிய ஏடுகள் சொல்வதைக் கேட்டு விட்டு, “காதல், காதல் என்று புலப்புவது பேதைமை. இரு மனமும் விவேகமான வழியில் இணைந்து ஒன்றுபடும் போது, காதலா பிறக்கிறது? ஊஹீம், இல்லை; இல்லவே இல்லை...அன்பு பிறக்கிறது! அன்பின் வழி பது உயிர் நிலை என்பது தமிழ் மறை ஒதும் நீதியல் லவா? அன்பைக் கடந்து காதல் உருவாவதென்றால், அது எங்ஙனம் ஒருநிலைப்பட்ட பண்புடன் விளங்கக் கூடும்?...இப்படிப்பட்ட நிலையற்ற கோளாறுகளினல் தான், காதலித்தவனை காதலி புறக்கணிக்கப்பதும், காதலிக்கப்பட்டவளை கா த வ ன் வஞ்சிப்பதும் போன்ற நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. தியாகத் தான்தான் மானுடப் பிறப்பு சிறக்கிறது என்றால்,

அதே தியாகத்தாலேயே என் காதலை-அதாவது, நான் அன்புக்குக் கட்டுப்பட்டு அவரைக் காதலித்த பண்பாட்டை-நிலைப்படுத்திக் காட்டவேண்டி, என் னேயே இழந்து, என் உரிமையை என் உயிர்த்தோழிக் குத் தானம் செய்து கொடுக்கத் திட்டம் செய்து விட்டேன். அப்போதுதானே, பெண்மைக்கு வாழ்த் துப் பாடிய அமரகவிக்கு என் ஆத்ம தரிசனமும் என் ஆத்ம சமர்ப்பணமும் பலன் கூறமுடியும்..”

மனசிற்குள்ளாகப் படித்துப் பார்த்தப்பின், திருத்தங் களைச் செம்மைப்படுத்திக்கொண்டிருக்கையில், கைக்கடிகாரத் தைப் பார்த்துக்கொண்டபடியே, பையா’ என்று அலட்டிய நேரத்தில், “ராதாதானுங்களே? அவன் ஜி. பி. ஒவுக்குப் போயிருக்கான். வத்திடுவான், ஸார்!...” என்ற பதில் கிடைக்கவே, ஞானசீலனுக்குப் பரம சந்தோஷம் பிடி கொடாமல் பாய்ச்சல் காட்ட, அவரும் அந்த மகிழ்ச்சிக்கு கடி நின்றுவேடிக்கை காட்ட, இப்படியான மனப்பின்னல்