பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

திருமுறை வகுத்த பேராசிரியராம் நம்பியாண்டார் நம்பிகள்,


“................................................. ........திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண் டேயும்மற் றப்பொருளைத்

தெருளாத உள்ளத் தவர்கவி பாடிச் சிரிப்பிப்பரே”

என்று இதில் அடங்கிய பொருட்சிறப்பை நனிவியந்து கூறியுள்ளார். செவ்வந்திப் புராணம், திருவெண்காட்டுப் புராணம் ஆசிரியர்கள் திருக்கோவையார் பாடிய ஆசிரியரைப் புகழ்கையில், முறையே ‘திருக்கோவை, நானூறும் அமுதூற மொழிந்தருளும் நாயகனை,’ என்றும். சிற்றம் பலக்கோவைத் தேன்சொரியும் செம்முகிலை, என்றும் கூறி நூலின் இன்சுவையை எடுத்துக்காட்டுவார் ஆயினர்.

திருக்கோவையாரின் சொல்லின்பத்தையும் பொருள் இன்பத்தையும் ஒருங்கே துய்த்து இன்புறவிழைந்த ஒரு புலவர், தாம் வழிபடும் கடவுளை நோக்கி,

“கண்ணிய ர்த் தேனூறு செஞ்சொல் திருக்கோவை

என்கின்ற நானூறும் என்மனத்தே நல்கு”

என்று வேண்டுவார் ஆயினர்.

திருக்கோவையாருக்கு எந்நூலுக்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அஃது, இறைவனே இதைத் தன் கையால் எழுதிய சிறப்பாகும். இறைவன் ‘பாவை பாடின வாயால் ஒரு கோவை பாடுக’ என்றனன். இன்னோரன்ன சிறப்பியல்பு இந்நூலுக்கு இல்லையானால்,

“ஆரணங் காண்என்பர் அந்தணர் யோகியர் ஆகமத்தின்
காரணங் காண்என்பர் காமுகர் காமநன் னூலதென்பர்
எரணங்காண் என்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்

சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே”