பக்கம்:ஈட்டி முனை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாந்தி நிலைய வெளியீடு 3

முதல் பதிப்பு ஏப்ரல் 1947

விலை அணா எட்டு


 

நான் சொல்வது

'ஈட்டி முனை' சாந்தி நிலையத்தின் மூன்றாவது வெளியீடு.எனது மூன்றாவது புத்தகமும் கூட.

இரண்டாவது வெளியீடான 'கோயில்களை மூடுங்கள்' எரிமலை வெளியீடு 'படவுலகில் கடவுள்கள்' இரண்டும் பிரசுரமான ஒரே மாதத்தில் விற்பனையாகிவிட்டது,பதிப்பகத்தாரர்களுக்கும் எனக்கும் தமிழ்நாடு அளித்த மகத்தான கௌரவமாகும்.இன்னும் தேவைக்குரல்கள் எழுகின்றன.ஆனால் போட சந்தர்ப்பம் இடம் தரவில்லை.அதற்குள் 'ஈட்டி முனை'எறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.தமிழ் செழிக்க,தமிழர் வளமடைய,தமிழர் வாழ,இலக்கியம் எப்படி வளரவேண்டும்,பேனா பெரியார்களின் கடமை என்ன என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந் நூல். எனது முந்தைய இரு புத்தகங்களைப்பற்றி தங்கள் கருத்துக்களை அறிவித்த அன்பர்களுக்கு என் நன்றி.இந் நூல் பற்றிய விமர்சனங்களையும் நான் வரவேற்கிறேன், வணக்கம்.

கோரநாதன்


ஊழியன் பிரஸ். துறையூர்.

Q. H. No. TY. 40. C. 2000

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/4&oldid=1535508" இலிருந்து மீள்விக்கப்பட்டது