பக்கம்:ஈட்டி முனை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

 எழுது, உண்மையான இலக்கியங்களை எழுது. இலக்கியத்தின் பல துறைகளையும் கையாண்டு உனது எண்ணங்களை எங்கும் பரப்பு, வருங்காலம் நம்முடையது' என்று சொல்லித் தூங்கி வழிய வேண்டாம். இழந்தமிழ்த் தோழர் களே! வருங்காலமும் நம்முடையது தான். இந்த நிகழ்காலமும் நம்முடையது தான். நமக்கு உரிய ஸ்தானத்தை நாம் தான் கைப்பற்றியாக வேண்டும். எழுதுங்கள் சக்தி பெற்று. உண்மைகளைச் சொல் லத் தயங்கவேண்டாம். பேனா முனை ஈட்டி முனையாக வும் மாறமுடியும் என்று குத்திக் காட்டத் தயங்க வேண்டாம், சமயம் வரும் போது. . நாம் தலைநிமிர்ந்து முன்னேற முடியும். ஏன்? தமிழ் நம் தாய்மொழி, தமிழ் நம் உயிர் தமிழ் நம் மூச்சு. தமிழ் நம் வாழ்வு, நாம் தமிழர்கள், நாம் வாழ்க! நாம் வெல்க! தமிழ் வாழ்வதற்காக! தமிழினம் வெல்வதற்காக! * தமிழ் இளமைக்குப் பால் - இன்பத் தமிழ் புகழ்மெக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர்தந்ததேன்!தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள் ! - இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத் தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்றதீ! (பாரதிதாசன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈட்டி_முனை.pdf/40&oldid=1370389" இலிருந்து மீள்விக்கப்பட்டது