இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
230
அமுதவல்லி
நெடுஞ்சாண் கிடையாக அந்த மண்ணில் அடித்து விழுந்து கூக்குரல் பரப்பினான்: பாங்குறத் தொங்கிய அந்தக் கஞ்சமலர்ப் பாதங்களைப் பற்றித் தன்னுடைய கண்களிலே ஒற்றிக்கொண்டு கதறிக் கதறிப் புலம்பினான் அவன்-காளியப்பன். எங்கண்ணே, செம்பவளம்! இனி எப்பொறப்புக்குமே நீ இந்தப் பாவியைச் சமிக்கவே மாட்டியோ?... ஐயையோ!. எந் தெய்வமே! .
உடைந்து கிடந்த கண்ணாடி வளைகள் சிரித்தன!
புலர்கிறது:
சாலையின் இரண்டாவது மரத்தின் கிளை உச்சத்திலே ஊருக்கென மற்றொரு காட்சி தவம் இருந்தது.
‘பாவிப் பயலே!... பாளத்த காளியப் பா!...”