பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20


விளையாட்டுக்களின் தோற்றம் :

விளையாட்டுக்களின் தோற்றத்தை நாம் ஆராயும் பொழுது, மனித வாழ்வின் மகிழ்ச்சிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் தோன்றியது போலவேதான் நமக்கு நம்பிக்கை யூட்டிக் கொண்டிருக்கின்றன.

காட்டிலே ஆதிகாலத்தில் வாழ்ந்த மனிதர்கள், மிருகங்களின் பசிவேகத் தாக்குதல்களுக்குப் பயந்து, பல சமயங்களில் இரையாகிப் போயினர். சில சமயங்களில் தப்பித்துக் கொண்டனர். எப்படி? வேகமாக ஓடி, பள்ளங்களைத் தாண்டி கற்களை எறிந்து, மரத்தில் ஏறி, கனமானவைகளை நகர்த்தி வைத்து.

இப்படிப் பல முறைகளில் பயந்தவர்கள் தப்பி ஓடி, தலை மறைவாகிப் போயினர் என்பது தான் வரலாறு.

அவற்றைக் கொஞ்சம் நாம் கூர்ந்து கவனித்தால் இன்றைய விளையாட்டு இலட்சியங்கள் எளிதாகவே புரியும்.

தப்பி ஓட அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளில் வேகமாக ஓடியது ஒட்டப் பந்தயமாக மாறியது.

பள்ளங்களைத் தாண்டியது நீளத்தாண்டலாக மாறியது.

புதர்களை, தடைகளைத் தாண்டியது உயரத்தாண்டலாக மாறியது.

கற்களை கம்புகளை வீசி மிருகங்களை விரட்டிய முறை எறியும் நிகழ்ச்சிகளாக (இரும்பு குண்டு, வேலெறிதல்) மாறியது.

இது விளையாட்டுக்களின் முதல் கட்டத் தோற்றம் என்றால், இரண்டாவது காணுவோம்.