பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அவர்கள் தமிழ் இலக்கியத்தில் விளையாட்டுத்துறை நூல்கள் அதிகமாக வெளிவர வேண்டும் என்ற முயற்சியில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும், கதை, கவிதை, நாடக நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

இவர் எழுதிய 'ஒலிம்பிக் பந்தயத்தின் கதை' எனும் நூல் 1977ம் ஆண்டும், 'விளையாட்டுக்களின் கதைகள்' எனும் நூல் 1981ம் ஆண்டும், 'விளையாட்டுக்களின் வழிமுறைகளும் வரலாறும்' எனும் நூல் 1984ம் ஆண்டும் தேசிய விருதினைப் பெற்று இருக்கின்றன.

தமிழிலும், உடற்கல்வித் துறையிலும், முதுகலை பட்டமும், டாக்டர் பட்டமும் (M.A., M.P.Ed. Ph.D.) பெற்றுள்ள ஆசிரியர், வானொலி, டெலிவிஷன், வாரப் பத்திரிக்கைகளில் தொடர்ந்து விளையாட்டுத்துறை பற்றி பேசியும் எழுதியும் வருகிறார்.

தமிழில் முதன் முறையாக "விளையாட்டுக் களஞ்சியம்" எனும் விளையாட்டுத்துறை மாத இதழை 1977ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நடத்தி பணியாற்றி வருகிறார்.