பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74


"எந்த ஆபத்துக்கும் நான் அஞ்ச மாட்டேன்' என்பது துணிவுடைமை அல்ல. அது முட்டாள் தனமான துணி வாகும்.

சூழ்நிலைகளை அனுசரித்து, மன உறுதியுடன் போராடி, அந்த போராட்டத்தில் இறுதியாக வெற்றி பெறும் ஆற்றலே துணிவாகும்.

இந்த இனிய மூன்று பண்புகளையும் ஒருவர் குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதைத் தானே எல்லா பெற்றோர்களும் எதிர்பார்க்கிறார்கள். இந்த சமுதாயமும் எதிர்பார்க்கிறது,

இவ்வினிய பண்புகளை வளர்க்க ஏற்ற இடம் விளையாட்டு மைதானம் தான் என்றால், ஆச்சரியப்படுபவர்கள் தான் அதிகம். பணிவும் கனிவும் துணிவும் போட்டியிட்டு வளருமிடம், போட்டிகளை வளர்க்கும் சூழ்நிலைகளை உரு வாக்கும் ஆடுகளங்கள் தாமே!

எதிராட்டக்காரர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் பணிவாகப் பழகுதல், கனிவாக உரையாடுதல், உறவாடுதல், துணிவோடு அவர்களுடன் போராடுதல் அங்கே தானே நடைபெறுகிறது.

விளையாட வருகின்றவர்களை நண்பர்களாக முதலில் வரவேற்றல், அன்பர்களாக அவர்களை உபசரித்தல்: அவர்களை மதித்தல்: அவர்களுடைய திறமைகளைப் பற்றிப் பேசுதல், நல்ல திறமைகளுக்கு மதிப்பளித்தல் இவையெல்லாம் பணிவான பண்பினை வளர்க்கும் பெருமைக்குரிய நிமலையாகும்.

ஏழையோ, பணக்காரரோ, அதிகார வர்க்கமோ அடிபணிந்து வேலைசெய்யும் குடும்பமோ- யார் எங்கிருந்து வருகின்றார்கள் என்று பார்க்காமல், திறமைக்கு