பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63


மனதுக்கும் உடலுக்கும் அதிக இணைப்பு இருப்பதை நாம் அறிந்திருக்கிறோம். எதையாவது எதிர்பார்த்து ஏங்கிக் கிடக்கின்ற மனத்தின் அவதி, எத்தனை எத்தனை மாற்றங்களை உடலுக்குள் உண்டு பண்ணி விடுகின்றன தெரியுமா!

ஆகவே, படபடப்பும் பதைபதைப்பும் நிறைந்த ஒரு மனிதன், பாதி உயிர் உள்ள ஜீவனாகவே வாழ்ந்து தொலைக்கிறான்.

இப்படி தொலைந்தும் நலிந்தும் ஏன் மனிதன் நலிய வேண்டும்? நாம் நன்றாகத்தானே இருக்கிறோம் என்ற நம்பிக்கை முதலில் மனிதனுக்கு வேண்டும். தமக்கு இருப்பது இன்றைக்குப் போதுமானதாக இருக்கிறது என்ற திருப்தி வேண்டும். நமக்கு இறைவன் எந்தக் குறையும் வைக்க வில்லையே என்ற சரணாகதி பண்புகள் வேண்டும். தனது உடமைகளைப் பற்றிய பாராட்டினை பெரிது படுத்திக் கொள்ள வேண்டும். இல்லாததற்காக ஏங்கக் கூடாது.

இப்படியெல்லாம் வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் எளிதாக்கிக் கொண்டு விடலாம். எப்படி? பிரச்சனைகளை முதலில் மறக்கக் கற்றுக் கொள்ளலாம்! எப்படி? அந்த நினைவுகளிலிருந்து சற்று விலகிக் கொண்டு விடுவதுதான். புத்தகங்கள் எதாவது படிக்கலாம் திரைப்படம், நாடகம் எதாவது பார்க்கலாம்.

இவையெல்லாம் மனதை மாற்றலாம். இருந்தாலும் இவைகள் சுற்றிச் சுற்றி மனித வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றித் தானே பெரிது படுத்திக் காட்டுகின்றன! மீண்டும் பழைய படபடப்புதான்.

ஓடிவரும் பிரச்சினைகளை மறக்க ஒரு எளிய வழி. இயற்கையுடன் இதயத்தை இணைத்துக் கொள்வது தான். காலாற நடக்கும் முறை. பிறரோடு சேர்ந்து விளையாட்டு மைதானங்களில் உலாவும் நடை. சிறு சிறு