பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

ஆழ்வார்களின் ஆரா அமுது


ஒருவர் துழைந்து விடுகின்றார். நெருக்கத்தினால் இது தெரிகின்றது. இந்தப் புதியவரைத் தெரிந்து கொள்ள அந்த இருட்டிலும் மழையிலும் விளக்கு கிடைக்கவில்லை. பொய்கையாழ்வார் ஒரு விளக்கேற்றுகின்றார். இதுதான் விளக்கு: வையம் தகளியா வார்கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்யச் சுடராழி யான்அடிக்கே சூட்டினேன் சொல்மாலை இடராழி நீங்குகவே என்று.” {தகளி - அகல்; வார் - நீண்ட, வெய்ய வெப்பமான; கதிரோன் . பகலவன்; செய்ய - சிவந்த சுடராழி யான் . ஒளி வீசும் சக்கரத்தையுடையவன்; இடர் ஆழி - துன்பக்கடல்) உலகத்தை அகலாகவும், & L డ3 శ} நெய்யாகவும், கதிரவனைத் திரியாகவும் கொண்டு ஒரு விளக்கை ஏற்றி விடுகின்றார். இந்தப் பாசுரத்தின் மகிமையால் அந்த இடைகழியில் பளிச் சென்று ஏதோ ஒரு திரை விலகி எப்படியோ ஒளியும் வந்து விடுகின்றது; புறத்தே கவிந்து கிடக்கும் இருளும் நீங்கி விடுகின்றது. அதே சமயத்தில் பூதத்தாழ்வாரும் ஞான விளக்கொன்றை ஏற்றுகின்றார். அன்பே தகளியா ஆர்வமே கெய்யாக இன்புருகு சிங்தை இடுதிரியா - கன்புருகி ஞானச் சுடர்விளக் (கு) ஏற்றினேன் காரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்* (ஆர்வம் - விருப்பம்; நன்பு ஆன்மா.1 அன்பை அகலாகவும், பொங்கி வரும் ஆர்வத்தை நெய் யாகவும், சிந்தையைத் திரியாகவும் கொண்டு ஞான 3. முதல் திருவந் , ! 4. இரண். திருவந், !