பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

ஆழ்வார்களின் ஆரா அமுது


இத்தகைய பக்திப் பெருக்கிற்குக் காரணமாக இருந்த பக்தி சாரரை-திருமழிசையாழ்வாரை-வைணவ உலகம், அன்புடன் அக்தாதி தொண்ணுற்றாறு உரைத்தான்வாழியே! அழகாரும் திருமழிசை அமர்ந்தசெல்வன் வாழியே! இன்பமிகு தையில்மகத் திங்குதித்தான் வாழியே! எழிற்சந்த விருத்தம்நூற் றிருப தீந்தான் வாழியே. முன்புகத்தில் வந்துதித்த முனிவனார் வாழியே! முழுப்பெருக்கில் பொன்னி.எதிர் மிதந்தசொல்லோன் வாழியே! கன்புவியில் நாலாயிரத் தெழுநூற்றான் வாழியே! கங்கள்பத்தி சாரனிரு நற்பதங்கள் வாழியே!" என்று வாழ்த்தி மகிழ்கின்றது. நாமும் அந்தப் பெரு உலகில் ஒன்றாகக் கலந்து ஆழ்வார்ை வாழ்த்தி மகிழ்வோம். 84. அப்புள்ளை ஆழ்வார்கள் வாழித் திருநாமம்-4