பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 93 வராகத்து அணிஉருவன் பாதம் பணியும் (31) என்ற பாசுரப் பகுதிகளில் இந்த அவதார அது சந்தானத் தைக் கண்டு மகிழலாம். பேயாழ்வார் வராக அவதாரத்தில் ஆழங்கால் படுவதைக் கண்டு மகிழ்வோம். கேழல் ஆய் மீளாது மண்அகலம் கீண்டு.அங்குஓர் மாதுஉகந்த மார்வற்குப் பெண்அகலம் காதல் பெரிது (54) மாது-பெரிய பிராட்டியார்) இந்த ஆழ்வார் ஒரே பாசுரத்தில்தான் இந்த அவதாரத்தை அநுசந்திக்கின்றார். கிருஷ்ணாவதாரம் : பொதுவாக எல்லா ஆழ்வார் களையுமே இந்த அவதாரத்தின் திருவிளையாடல்கள் ஈர்த் துள்ளதைப் பாசுரங்களில் கண்டு மகிழலாம். பொய்கை யாழ்வார் ஈடுபாட்டைக் காண்போம். மயங்க வலம்புரி வாய்வைத்து, வானத்து இயங்கும் எரிகதிரோன்தன்னை முயங்கமருள் தேர்ஆழியால் மறைத்தது என்?t திரும்ாலே போர் ஆழிக் கையால் பொருது? (8) மண்ணும் மலையும் மறிகடலும், மாருதமும் விண்ணும் விழுங்கியது மெய்என்பர் (10) பேய்முலை கஞ்சு ஊன்ஆக உண்டான் (11)