பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

137

சித்ராவும் தேவகியும் அவனுக்கு நன்றி தெரிவிக்க முற்பட்டார்கள். அவன் குறுக்கிட்டுத் தடுத்தான்.

“நெருங்கிப் பழகறவங்க ஒருத்தருக்கொருத்தர் நன்றியே சொல்லக் கூடாது. நல்ல காரியத்தை யாராவது செய்தால் அவங்களை அளவு கடந்து பாராட்டறதும் கூடச் செயற்கையான எல்லைவரை போயிடுது. நல்லது செய்யறதே அபூர்வம்னு நினைக்கிற அளவுக்கு அது அதிகமாகப் பாராட்டப் படுகிறது இங்கே. நல்லதுதான் செய்யணும் - செய்ய முடியும் - செய்யப்பட வேணும்னு - இயல்பான நினைப்பே வர்றது இல்லை.”

பூமி சொல்லியதில் இருந்த நியாயம் சித்ராவுக்குப் புரியச் சிறிது நேரம் பிடித்தது. புரிந்தவுடனே இதைச் சொல்லியதின் மூலம் அவன் எவ்வளவிற்கு உயர்ந்தவன் என்பதும் சேர்த்தே புரிந்தது.


22

இந்த நூற்றாண்டு அரசியலுக்கு யோக்கியனைவிட யோக்கியனைப் போலப் பாசாங்கு செய்யும் சாமர்த்தியமுள்ளவனே எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தேவைப்படுகிறான்.


ருளில் அடையாளம் தெரியாத யாரோ சிலரால் பாராளுமன்ற உறுப்பினர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் குமரகுரு தாக்கப் பட்டதாக ஒரு பரபரப்பு பத்திரிகைகளில் கிளம்பி ஓய்ந்தது. பன்னீர்ச்செல்வத்தின் அரசியல் சார்புக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த பத்திரிகைகள் இந்தத் தாக்குதலில் ஒரு பெண் விவகாரம் சம்பந்தப் பட்டிருப்பதாகப் பிரசுரிக்கவே. பன்னீர்ச்செல்வம் அதிகம் மிரண்டு போனார்.