பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

சாயங்கால மேகங்கள்

சென்னையில் ஒளித்து வைப்பதை விட மாமல்லபுரத்தில் ஒளித்து வைப்பது நல்லது என்று மன்னாரு வகையறா பையனை மாமல்லபுரத்தில் கடத்திக்கொண்டு போய் மறைத்து வைத்திருக்கலாமென்ற சந்தேகம் அவன் மனத்தில் வலுத்தது. தற்செயலாகத் தெரிய வந்த இந்தப் புதிய தகவலால் முத்தக்காளையும் அவளுடைய புதிய போக்கையும் கொஞ்சம் மறக்க முடிந்தது.

ஸ்கூட்டர் திருவான்மியூரைக் கடந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த சித்ரா எதற்காகவோ முத்தக்காளைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அப்போது அவள் ஊரிலிருந்து, தன்னிடம் சொல்லாமலே உறவுக்காரப் பையனை வரவழைத்திருக்கும் தகவலைப் பூமி. சித்ராவுக்குத் தெரிவித்தான். அதைக் கேட்டுச் சித்ரா எள்ளளவும் திகைப்போ ஆச்சரியமோ அடையவில்லை.

“அவங்க இப்படி எதாவது செய்வாங்கன்னு எனக்குத் தெரியும். வரவர அவங்களுக்கு நம்ம மேலே எல்லாம் நம்பிக்கை போயிடுச்சு” ...என்றாள் சித்ரா.

நம்பிக்கை இழக்கும்படியாக அப்படி நாம் என்ன மோசடி செய்தோம்?”

“அவங்களைப் போல ரெண்டுங் கெட்டான் ஆளுங்க அப்படி எல்லாம் நல்லது கெட்ட்து யோசிச்சு எதையும் பண்ண மாட்டாங்க. சொல்லப்போனா மெஸ்ஸிலே வேலை செஞ்சி ஒரு பையனைக் காணலைங்கிறதுக்காக நீங்க இவ்வளவு கவலைப் பட்டு அலையறதே அவங்களுக்குப் பிடிக்கலை. திருட்டுப் பையனைத் திருத்கணும்கிற நல்லெண்ணத்திலே நீங்க அங்கே வேலைக்குச் சேர்த்ததும் அவங்களுக்குப் பிடிக்கலை...”

“உலகமே ரூபாய் அணாப் பைசா வரவு செலவு மட்டும் தான் என்று மட்டும் நினைக்கிறவளுக்கு அது பிடிக்காது தான்.”

“கொஞ்ச நாளாகவே மெஸ்ஸில் இப்படி ஏதாவது நடக்கும்னு நான் எதிர்பார்த்தேன். நீங்க என்னோட