பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

சாயாங்கால மேகங்கள்

பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது லெண்டிங் லைப்ரரி பரமசிவத்தின் தம்பி ஸ்கூட்டரில் அங்கு வந்தான்.

“வீட்டுக்கே வீடு தேடிச் சென்று புத்தகங்கள் பத்திரிகைகள் வழங்கும் பிரிவு ஒன்றைப் புதிதாக ஏற்படுத்த அதற்காகத் தன் தம்பிக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்திருந்தார் பரமசிவம். இந்த ‘டோர் டு டோர் லெண்டிங் ஸ்கீமை'ப் பரமசிவம் தொடங்கியபோது பூமியும் சித்ராவும் தனித்தனியே அதில் சந்தா கட்டி அங்கத்தினராகி இருந்தார்கள்.

இப்போது பூமிக்குப் புத்தகங்கள், பத்திரிகைகள் கொடுப்பதற்காக வந்திருந்த பரமசிவத்தின் தம்பியை உள்ளே சிற்றுண்டி காபி சாப்பிடும்படி சொல்லி அனுப்பிவிட்டு அவனுடைய அநுமதியுடன் அதே ஸ்கூட்டரில் சித்ராவோடு புறப்பட்டான் பூமி, பத்து நிமிஷத்தில் காணாமல் போன அந்தப் யைனின். வீட்டில் போய் விசாரித்துவிட்டு திரும்பி வந்து விடலாம் என்பது பூமியின் திட்டமாயிருந்தது. தன்னுடைய கற்பனைகள் எல்லாம் தப்பாயிருந்து அவன் உடல் நலக்குறைவினால் வீட்டிலேயே இருந்தாலும் இருக்கலாமே என்று பூமிக்கு உள்ளுற ஒரு சந்தேகம் இருந்தது.

போய்ப் பார்த்ததில் அந்தச் சந்தேகமும் தீர்ந்து விட்டது.

“அவன் நேத்து ராத்திரியே வீடு திரும்பலீங்க. ஹோட்டல்லியே வேலை அதிகமாயிருந்து தங்கியிருப்பானோன்னு நான் நெனைச்சுக்கிட்டிருக்கேன்” என்று அவன் தாய் பதில் சொன்னாள்.

அவன் மெஸ்ஸை விட்டு இரவு ஒன்பதரை மணிக்கே வீடு திரும்பிவிட்டான் என்ற தகவலை இவர்கள் தெரிவித்ததும் அந்தத் தாய் பதறி அழத் தொடங்கி விட்டாள்.

அவளுக்கு ஆறுதல் கூறிக் தேற்றிப் பையனை எப்படியும் தேடி அழைத்து வருவதாக உறுதி கூறிவிட்டுப் பூமியும் சித்ராவும் அங்கிருந்து புறப்பட்டார்கள். சித்ரா கூறினாள்;