பக்கம்:புத்த ஞாயிறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கோதையின் காதல்

குடிசை. மோகனவல்லி அங்கு போகிருள். அவர்ை. சற்றும் எதிர்பார்க்காதவகை மூங்கிலில் புதிதாகச் செய்த புல்லாங்குழலுக்குத் துளையிட்டுக்கொண்டு. மணவாளன் குடிசை வாசலில் அமர்ந்திருக்கிருன். சற்றுத்தள்ளிச் சுனைப்பிளவில் கோதை நீராடிக்கொண். டிருக்கிருள். -

தன்னருகே ஆட்களுடன் மோகனவல்லி வருவது கண்டு. நிமிர்ந்து பார்த்த மணவாளன், அவளுடைய ஆணவ. ஆதிகாரங்களை அலட்சியம் செய்கிற மாதிரி முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபக்கமாகப் பார்க்கிருன். மோகனவல்லிக்கு அவனுடைய அலட்சியம் சினமூட்டு கிறது, வேதனையளிக்கிறது) - மோகனவல்லி: நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கிருேம்.

உங்களிடம் சங்கீதம் கற்றுக் கைவிடப்பட்ட மோகன வல்லி வேறு. இப்போது நீங்கள் சந்திக்கிற இந்த மோகனவல்லி வேறு... மணவாளன்: யாராயிருந்தால் எனக்கென்ன?

மோகனவல்லி: மரியாதையாக நடந்துகொள்ளத் தெரிய, வேண்டும். இப்போது உங்கள் எதிரே வந்து நிற்கிற, மோகனவல்லி இந்த நாச்சியார்புரம் பாளையத்தை ஆள்கிற இளவரசி. அவளெதிரே இவ்வளவு அலட்சிய மாக நீங்கள் உட்கார்ந்திருத்தலாகாது.

மணவாளன்: அப்படியா? இளவரசி, மரியாதை என்பது முதலில் உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே? டாளே யத்து இளவரசி தன் எல்லைக்கு அப்பால் காடுதேடி வந்து இப்படி மரியாதையை எதிர்பார்க்க முடியாது...

மோகன வல்லி : இருக்கலாம்! ஆனால் நீங்கள் என்னிட மிருந்து எதிர்பார்த்தே ஆகவேண்டிய பெரும் பயன் ஒன்றுண்டு, கவிஞரே! நீங்களும் உங்களுடைய அபூர்வ மான கலைநுணுக்கங்களும் பரம்பரை இல்லாமல் இந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/74&oldid=597439" இலிருந்து மீள்விக்கப்பட்டது