பக்கம்:புத்த ஞாயிறு.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. பார்த்தசாரதி 1633

மலேச்சரிவில் முழு வட்டமாக நிலாக் காய்கின்றஅழகும்...என்ன சிரிக்கிறீர்கள்? ஒரேயடியாகத் தகவல் தொகுப்பாக என் வருணனை மாறிவிட்டதா என்ன?

குமாரகவி அதில்லை சுகுளு! நீ வருணிக்கிற இந்தத் திராட்சைத் தோட்டங்களை விடவும், சுவையும் இனிமையும் நிறைந்த வேறு இரண்டு திராட்சைக் கனிகளே எனக்குத் தெரியுமே! அவை மண்ணில் முளைக் காமல் மரத்தில் படராமல் கனிந்திருக்கும். சொல் அதிராமல் சங்கீதம்போல் இனிய குரலில் பேசும், அந்தத் திராட்சைக் கனிகள் இரண்டும்தான், இப்போது இதோ இந்தத் திராட்சைத் தோட்டத்தை பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனவே!

(சிரிக்கிரு.ர். சுகுணு காரைச் சற்று நிறுத்துகிருள். புகழ்ச்சி கேட்ட நாணத்தில் தலை கவிழ்கிருள்.)

காட்சி-5

fகுருகுமலைப் பள்ளத்தாக்கில் ஒரு விருந்தினர் விடுதியின் அறை. சுகுளு எழுத எழுத, குமாரகவி சொல்லிக் கொண்டு வருகிருர்) . ‘. . . . - . . . . குமாரகவி: நேற்று என்ன எழுதி முடித்திருந்தாய்? சற்றுப்

சுகுளு: (படிக்கிருள்) தோட்டம் முழுவதும் இனிக்கிற் பழங்களே பழுக்கும் திராட்சைவனமோ, அல்லது தோட்டம் முழுவதும் புளிக்கின்ற பழமே பழுக்கும். திராட்சைவனமோ எங்கும் கிடையாது. இன்பமுழ். துன்பமும் கலந்து வருகிற வாழ்க்கையைப் போல் ஒரே மண்ணில் வகுத்த வாழ்வில் இன்ப துன்பங்களைக் கலந்தே எதிர்பார்க்கும் மனிதர்களைப் போல் அந்தத் திராட்சைத் தோட்டமும் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புத்த_ஞாயிறு.pdf/105&oldid=597470" இலிருந்து மீள்விக்கப்பட்டது